சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்ததால் சாலைகளில் வாகன விபத்துகள் குறைந்தன. இதனால் மோட்டார் காப்புறுதி நிறுவனங்களுக்கு லாபம் கூடியதாக சிங்கப்பூர் பொது காப்புறுதிச் சங்கம் நேற்று தெரிவித்தது.
மோட்டார் வாகன காப்புறுதிப் பிரிவில் கடந்த ஆண்டு மொத்த சந்தாத் தொகை 0.7 விழுக்காடு உயர்ந்து $1.13 பில்லியனாக பதிவானது. அப்பிரிவில் லாபம் $104.5 மில்லியனாக இருந்தது.
ஒப்புநோக்க, 2019ல் மொத்த சந்தாத் தொகை $1.12 பில்லியனாகவும் லாபம் $17.4 மில்லியனாகவும் இருந்தது.
எனினும், பொருளியல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் வாகன விபத்துகளின் எண்ணிக்கை கூடி வருவதாக சங்கம் எச்சரித்துள்ளது.

