20.5 கிலோ கஞ்சா சிக்கியது 14 ஆண்டுகளிலேயே ஆக அதிகம்; மொத்தம் $1.7 மி. போதைப்பொருள் பிடிபட்டது

20.5 கிலோ கஞ்சா சிக்கியது 14 ஆண்டுகளிலேயே ஆக அதிகம்; மொத்தம் $1.7 மி. போதைப்பொருள் பிடிபட்டது

2 mins read
20503518-d294-43c0-9cd2-fd96ecf33109
கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஐஸ், ஹெராயின், எரிமின்-5 மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள், போலிஸ் கன்டோன்மெண்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் காட்டப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு, 14 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு ஆக அதிக அள­வில் ஏறத்­தாழ 20.5 கிலோ கஞ்­சா­வைக் கைப்­பற்றி உள்­ளது.

அந்­தப் பிரி­வின் அதி­கா­ரி­கள் மார்ச் 16ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்­களில் எடுத்த நட­வடிக்­கை­யில் ஏறத்­தாழ 8.3 கிலோ ஹெரா­யின்; ஏறக்­கு­றைய 6.4 கிலோ ஐஸ்; 1,091 எக்ஸ்­டசி மாத்­தி­ரை­கள்; ஏறக்­கு­றைய 1,000 எரி­மின்-5 மாத்­தி­ரை­கள் ஆகி­ய­வற்­றை­யும் பறி­மு­தல் செய்­த­னர்.

பிடி­பட்ட மொத்த போதைப் பொரு­ளின் மதிப்பு $1.7 மில்­லி­யன். அவை 3,950 ஹெராயின் புழங்­கி­கள், 3,700 ஐஸ் புழங்­கி­கள், 2,930 கஞ்சா பித்­தர்­கள் ஆகி­யோ­ருக்கு ஒரு வார காலத்­துக்­குப் போது­ம் ­என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007 ஆம் ஆண்­டுக்­குப் பிறகு இந்த அள­வுக்கு ஆக அதி­க­மாக போதைப்­பொ­ருள் சிக்­கி­ய­தில்லை. 14 ஆண்­டு­க­ளுக்கு முன்­அந்த ஆண்­டில் ஏறத்­தாழ 20.6 கிலோ கஞ்சா சிக்­கி­யது.

அதி­கா­ரி­கள் இப்­போது இரண்டு நாட்­கள் மேற்­கொண்ட போதைப்­பொ­ருள் ஒழிப்பு வேட்டையில் 27 முதல் 33 வரை வய­துள்ள மூன்று சிங்­கப்­பூ­ரர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். போதைப்பொருள் தொடர்­பான குற்­றச்­செ­யல்­களில் அவர்­கள் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள் என்று அதி­கா­ரி­கள் சந்­தே­கப்­ப­டு­கி­றார்­கள்.

கெம்­பாஸ் ரோடு அருகே ஒரு காரை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­டதை அடுத்து இரண்டு பேர் பிடி­பட்­ட­னர். அவர்­கள் வந்த காரில் மொத்­தம் 20 போதைப்­பொ­ருள் பொட்­ட­லங்­கள் இருந்­தன. அவற்றில் ஏறத்­தாழ 419 கிராம் ஐஸ், 87 எக்­ஸ்டசி மாத்­தி­ரை­க­ள் கைப்­பற்­றப்­பட்­டன.

முத­லில் கைதான இரு­வ­ரில் ஒரு­வ­ரான 33 வயது ஆட­வரை மெக்­நா­யர் ரோட்­டில் இருக்­கும் அவ­ரின் வீட்­டுக்கு அதி­கா­ரி­கள் கொண்டு சென்­ற­னர்.

அங்கு ஏறத்­தாழ 8.3 கிலோ ஹெரா­யின் இருந்த 19 பொட்­ட­லங்­கள், ஏறக்­கு­றைய 5 கிலோ இருந்த 20 ஐஸ் போதைப்­பொ­ருள் பொட்­ட­லங்­கள், 20.5 கிலோ கஞ்சா இருந்த 20 பொட்­ட­லங்­கள், 1,000 எக்ஸ்­டசி மாத்­தி­ரை­கள், 100 எரி­மின்-5 மாத்­தி­ரை­கள் சிக்­கின.

அதே நாளன்று மாலை­யில், அதே மெக்­நா­யர் ரோடு வீடு அருகே ஒரு மோட்­டார்­சைக்­கி­ளில் போதைப்­பொருட்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. அந்த வாக­னம் முத­லில் பிடி­பட்­ட­வர்­களில் இரண்­டா­வது நப­ரான 27 வயது ஆட­வ­ருக்­குச் சொந்­த­மா­னது.

அடுத்த நாளில் 30 வய­துள்ள மூன்­றா­வது ஆட­வர் சிக்­கி­னார்.

மத்­திய போதைப்பொருள் ஒழிப்­புப் பிரிவு தொடர்ந்து புலன்­விசா­ரணை நடத்தி வரு­கிறது.

500 கிரா­முக்­கும் அதி­க­மான கஞ்­சா­வைக் கடத்­து­வோ­ருக்குப் போதைப்­பொ­ருள் தவ­றான பயன்­பாட்­டுச் சட்­டத்­தின்­படி, மரண தண்­டனை விதிக்க முடி­யும்.