அரசாங்கம், நிறுவனங்கள், ஊடகம், அரசு சாரா அமைப்புகள் மீதான நம்பிக்கை கூடியது

அரசாங்கம், நிறுவனங்கள், ஊடகம், அரசு சாரா அமைப்புகள் மீதான நம்பிக்கை கூடியது

2 mins read

கொவிட்-19 மற்­றும் பொரு­ளி­யல் மந்த சூழ­லில், சிங்­கப்­பூ­ரில் நான்கு முக்­கிய தூண்­கள் மீதான பொது­மக்­க­ளின் நம்­பிக்கை அதி­க­ரித்து இருக்­கிறது. அர­சாங்­கம், நிறு­வ­னங்­கள், அனைத்து ஊட­கம் மற்­றும் அரசு சாரா அமைப்­பு­கள் ஆகிய நான்­கின் மீதான பொது­மக்­க­ளின் ஒட்­டு­மொத்த நம்­பிக்கை முந்­தைய ஆண்­டை­விட ஆறு புள்­ளி­கள் அதி­க­மாகி 10 ஆண்­டு­களில் இல்­லா­த­படி 68 விழுக்­காட்டை எட்­டி­யது.

'இடெல்­மென் டிரஸ்ட் பாரோ மீட்­டர் 2021' அறிக்கை நேற்று வெளி­யி­டப்­பட்­டது. சிங்­கப்­பூரைப் பற்­றிய அந்த அறிக்­கை­யில் இந்த நன்­னம்­பிக்கை தெரி­ய­வந்­துள்­ளது. அர­சாங்­கத்­தின் மீது ஆக அதி­க­மாக 76 விழுக்­காடு நம்­பிக்கை நில­வு­கிறது. இது சென்ற ஆண்டு 70 விழுக்­கா­டாக இருந்­தது.

அரசு சாரா அமைப்­பு­கள் (70%), நிறு­வ­னங்­கள் (65%), ஊட­கம் (62%) ஆகி­யவை அடுத்­த­டுத்த இடங்­களைப் பெறு­கின்­றன.

அந்த அறிக்கை சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ரை­யும் உள்­ள­டக்­கப்­பட்டு நடத்­தப்­பட்ட ஆய்வு அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது. ஆய்­வில் கலந்­து­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­களில் 18 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே செய்தி­ க­ளு­டன் இடை­வி­டா­மல் தங்­களை ஈடு­ப­டுத்­திக்­கொண்டு பல்­வேறு கண்­ணோட்­டங்­க­ளு­டன் நல்ல தக­வல் பழக்­க­வ­ழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிக்­கி­றார்­கள் என்­பது ஆய்வு மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

அவர்­கள் செய்­தி­களை சரி­பார்க்­கி­றார்­கள். சரி­பார்க்­கப்­ப­டாத தக­வல்­களை அவர்­கள் பரப்­பு­வ­தில்லை.

தங்­க­ளுக்கு ஆர்­வ­மாக உள்ள செய்­தி­களைப் பகிர்ந்­து­கொள்ள அல்­லது வேறு யாருக்­கும் அனுப்ப 60 விழுக்­காட்­டி­னர் ஆர்­வத்­து­டன் இருக்­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

அந்த ஆய்­வில் 1,150 சிங்­கப்­பூரர்­கள் கலந்­து­கொண்­டார்­கள். இடெல்­மென் நிறு­வ­னம் 28 நாடு­களில் 18 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள 33,000 மக்­களை உள்­ள­டக்கி பரந்த அடிப்­ப­டை­யில் ஆய்வை நடத்­தி­யது. அதன் ஒரு பகு­தி­யாக சிங்­கப்­பூர் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது.

சிங்­கப்­பூர் 68% நம்­பிக்கை அள­வு­டன், இந்­தியா (77), சீனா (72), இந்­தோ­னீ­சியா (72), சவூதி அரே­பியா (69) ஆகிய நாடு­க­ளுக்கு அடுத்தபடியாக ஐந்­தா­வது இடத்­தில் உள்­ளது.

ஆஸ்­தி­ரே­லியா (59) போன்ற நாடு­கள் பட்­டி­ய­லில் நடு­நிலை அள­வில் இருக்­கின்­றன. அமெ­ரிக்கா (48), பிரிட்­டன் (45) ஆகிய நாடு­கள் ஆய்­வில் கலந்­து­கொண்­ட­வர்­களைப் பொறுத்­த­வ­ரை­யில் நம்­பிக்கை குறை­வாக இருக்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் ஆய்­வில் கலந்­து­கொண்­ட­வர்­க­ளி­டையே ஆக அதிக நம்­பிக்­கை­யு­டன் திகழ்­வது அர­சாங்­கம்­தான். 2012க்குப் பிறகு வழி­வழி­யான ஊட­கத்­தின் மீதான நம்­பிக்கை 60 விழுக்­காட்டு அள­வை­விட முதன்­மு­த­லாக இப்­போ­து­தான் குறைந்து இருக்­கிறது.

மின்­னி­லக்க செய்­தி­க­ளு­டன் ஒப்­பி­டும்போது வழி­வ­ழி­யான செய்­தித்­தாள் செய்­தி­கள் சுடச்­சுட புத்­தம்­புது தக­வல்­களைக் கொண்­டி­ருக்கமாட்டா என்ற ஓர் எண்­ணம் இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று இந்த அறிக்கை பற்­றிய குழு விவா­தத்­தில் கலந்­து­கொண்ட கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் சமூக மற்­றும் கலா­சா­ரத் துறைத் தலை­வர் கரோல் சுன் கூறி­னார்.