இந்திய இசையமைப்பாளரின் சிங்கப்பூர் தேசிய கீத பதிப்புரிமை கோரிக்கை: அமைச்சு நிராகரிப்பு

இந்திய இசையமைப்பாளரின் சிங்கப்பூர் தேசிய கீத பதிப்புரிமை கோரிக்கை: அமைச்சு நிராகரிப்பு

2 mins read

பொது­மக்­கள் பல­ரின் நெஞ்­சத்­தில் நீங்கா இடம்­பி­டித்­துள்ள சிங்­கப்­பூ­ரின் தேசிய தின பாடல்­களில் ஒன்­றான 'கவுண்ட் ஆன் மி சிங்­கப்­பூர்' இப்­போது பதிப்­பு­ரி­மைப் பிரச்­சினை­யில் சிக்கி இருக்­கிறது.

1986 தேசிய தின அணி­வ­குப்­பில் இடம்­பெற்ற அந்­தப் பாடலை நகல் எடுத்­து­விட்­ட­தாக இந்­திய இசை­ய­மைப்­பா­ளர் ஜோசஃப் மெண்­டோசா என்­ப­வர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்டு இருக்­கிறது. ஆனால் அந்­தப் பாடல், 'வி கேன் அச்­சீவ்' என்ற பெய­ரில் 1983ல் எழு­தப்­பட்ட தன்­னு­டைய பாடல் என்று அவர் கூறு­கி­றார்.

கவுண்ட் ஆன் மி சிங்­கப்­பூர் என்ற பாடலை ஒரு சில நாட்­க­ளுக்கு முன்­பு­தான் தனக்­குத் தெரி­யும் என்­றும் அவர் கூறு­கி­றார்.

இந்த இரண்டு பாடல்­களும் ஏறக்­குறைய ஒரே மாதி­ரி­யாக இருக்­கின்­றன. பாடல்­களில் சிங்­கப்­பூ­ருக்குப் பதி­லாக 'இந்­தியா' அல்­லது 'மதர் இந்­தியா' என்ற வார்த்தை மட்­டும் மாறி இருக்­கிறது.

இத­னி­டையே, இது பற்றி கருத்து தெரி­வித்த கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்சு கவுண்ட் ஆன் மி சிங்­கப்­பூர் பாட­லின் பதிப்­பு­ரிமை தன்னிடம் இருப்பதால் இந்­திய இசை­ய­மைப்­பா­ளர் கோரிக்கை குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கக் கூறியது.

இதன்­ தொ­டர்­பில் திரு மெண்­டோ­சாவை தொடர்­பு­கொண்­ட­தா­க­வும் அவரி­ட­மி­ருந்து இன்­ன­மும் பதில் வர­வில்லை என்­றும் அமைச்சு தெரிவித்தது.

இத­னி­டையே, அந்­தப் பாட­லின் மூல ஒலிப்­ப­திவு நாடாக்­கள் இப்­போது தன்­னி­டம் இல்லை என்­றும் அவை 2005ல் மும்பை­யில் வெள்­ளம் ஏற்­பட்­ட­போது அடித்­துச் சென்­று­விட்­ட­தா­க­வும் திரு மெண்­டோசா கூறு­கி­றார்.

மும்­பை­யில் இருக்­கும் 'பால் பவன்' என்ற ஆத­ர­வற்­றோர் இல்­லத்­தில் இசை­யைப் பயிற்­று­வித்­த­போது அந்­தப் பாட­லைத் தான் எழு­தி­ய­தா­க­வும் அதை 1983ல் 250 ஆத­ர­வற்ற பிள்­ளை­கள் பாடி­ய­தா­க­வும் அது ஒன்­று­தான் தன்­னி­டம் இப்­போது உள்ள ஒரே ஆதா­ரம் என்­றும் அந்த 58 வயது இசை­ய­மைப்­பா­ளர் கூறு­கி­றார்.

திரு மெண்­டோசா, அந்­தப் பாட­லுக்­கான உரி­மையை 'பாவ்­லின் இந்­தியா' என்ற கிறிஸ்­துவ புத்­த­கம் மற்­றும் இசைத்­தட்டு நிறுவனம் ஒன்­றுக்கு விற்­று­விட்­டார்.

கவுண்ட் ஆன் மி சிங்­கப்­பூர் பாட­லின் தழு­வல்­தான் வி கேன் அச்­சீவ் பாடல் என்­பதை 'பாவ்­லின் இந்­தியா' நிறு­வ­னம் பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொண்டு இருக்­கிறது என்­பதை அமைச்சு தன்­னு­டைய ஃபேஸ்புக் பக்­கத்­தில் சுட்­டிக்­காட்­டி­யது.

அதோடு மட்­டு­மின்றி, கவுண்ட் ஆன் மி சிங்­கப்­பூர் பாடல் 1986 முதல் சிங்­கப்­பூ­ரின் தேசிய கீத­மாக இருந்து வந்­துள்­ளது என்­ப­தும் தனக்­குத் தெரி­யாது என்று கூறிய பாவ்­லின் இந்­தியா நிறு­வ­னம், மன்னிப்­புக் கேட்­டுக்­கொண்டு அந்­தப் பாடலை தன்­னு­டைய தளங்­களில் இருந்து நீக்­கி­விட்­டது. அதை அமைச்சு ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

"கவுண்ட் ஆன் மி சிங்­கப்­பூர் பாடல் மிக­வும் பிர­ப­ல­மான தேசிய பாடல்­களில் ஒன்று. அதே நேரத்­தில் இந்­தி­யா­வில் ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­க­ளும் பள்­ளிக்­கூ­டங்­களில் அந்­தப் பாடலை பாடி தேசப்­பற்றை வெளிப்­ப­டுத்­தும் காணொளி­கள் அங்கு பிர­ப­ல­மாகி உள்ளன.

"இந்­தி­யா­வில் அந்­தப் பாட­லுக்கு நல்ல வர­வேற்பு இருப்­ப­தாக தெரி­வது மகிழ்ச்சி அளிக்­கிறது," என்று அமைச்சு கூறி­யது.