சிங்கப்பூரின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான எம்இஎஸ் குழுமத்தின் மீது 553 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
'ஒர்க் பாஸ்' விண்ணப்பங்களில் பொய்யான சம்பளம் மற்றும் தவறான விவரங்களை தெரிவித்தது தொடர்பில் அந்தக் குழுமத்தின் மூன்று நிறுவனங்கள் மற்றும் ஐந்து இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டவர்களை உரிய வேலை அனுமதிச் சீட்டு இல்லாமல் வேலைக்கு அமர்த்தியது, ஊழியர்களை அதிகப்படியாக மிகுதி நேர வேலையில் ஈடுபடுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.
எம்இஎஸ் குழுமத்தைச் சேர்ந்த மினி என்வைரன்மண்ட் சர்வீசஸ், லேபர்டெல் மேனஜ்மண்ட் கார்ப்பரேஷன், எம்இஎஸ் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவை அந்த மூன்று நிறு வனங்களாகும்.
திரு சிவ் சாய்ன் லூன், 56, ஃபாத்திமுன்னிசா முகமட் அப்துல் ஜலீல், 37, ஹாஜா நவாஸ், 52, பர்விஸ் அஹமட் முகமட் கவுஸ், 44, முகமட் ஜின்னா முகமட் அப்துல் ஜலீல், 38 ஆகியோர் ஐந்து இயக்குநர்கள் ஆவர். ஐவரும் சிங்கப்பூரர்கள்.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டம் மற்றும் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் ஒட்டுமொத்தமாக மூன்று நிறுவனங்களும் ஐந்து இயக்குநர்களும் 553 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கு வதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் மனிதவள அமைச்சு தெரிவித்தது.
எம்இஎஸ் குழுமத்தின் நிறுவனங்களில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக 2019ல் தகவல் கிடைத்ததையடுத்து விரிவான விசாரணையில் இறங்கியதாக அமைச்சு குறிப்பிட்டது. அந்த விசாரணையில் 2009 முதல் 2019 மே மாதம் வரை லேபர்டெல் மற்றும் எம்இஎஸ் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு உரிய வேலை அனுமதிச் சீட்டு இல்லாமல் ஊழியர்களை மினி என்வைரன்மண்ட் சர்வீசஸ் அனுப்பி வைத்த விவரம் தெரிய வந்தது.
அவர்களுடைய வேலை அனு மதிச் சீட்டு விண்ணப்பங்களில் தவறான சம்பளம், வேலை விவரம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. இதற்கு மூன்று நிறுவனங்களும் இயக்குநர்களும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
2019 மார்ச் முதல் மே வரையில் மினி என்வைரன்மண்ட் சர்வீசஸ் தனது ஊழியர்களை அனுமதிக்கப்பட்ட மிகைநேரத்துக்கு மேல் அதிகப்படியாக வேலை செய்ய வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வேளையில் சட்டவிரோத செயல்களைப் பற்றி தெரிவித்த ஊழியரை மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர் நிர்வாகப் பிரிவின் இயக்குநர் கெவின் டியோ பாராட்டியுள்ளார்.
"ஊழியர் வேலை நியமனம் தொடர்பான இத்தகைய குற்றச்சாட்டுகளை அமைச்சு கடுமை யாகக் கருதுகிறது. அமலாக்க நடவடிக்கைகளிலும் கண்காணிப்பிலும் தொடர்ந்து விழிப்புடன் அமைச்சு செயல்படும். குற்றச் செயல்களில் ஈடுபடும் தரப்பினர் மீது வலுவான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று திரு டியோ அறிக்ைகயில் வலி யுறுத்தியிருந்தார்.
வெளிநாட்டு ஊழியர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தினால் அபராதமோ அல்லது சிறைத் தண்டனையோ விதிக்கப்படலாம். வேலை அனுமதி விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல் அளித்தால் 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

