சாங்கி கடலில் சிறுவன் மூழ்கிய சம்பவம் எதிர்பாராத துரதிர்ஷ்டவசமானது என்று மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மணலில் வீடு கட்டி விளையாடிய 14 வயது சிறுவன் தண்ணீரில் தன் மீதிருந்த மணலை கழுவச் ெசன்றான். அப்போது ஏற்பட்ட திடீர் சுழற்சியில் அவன் அடித்துச் செல்லப்பட்டான்.
அவனை மீட்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இரண்டரை மணி நேரம் போராடியது. ஆனால் புடேரா முஹமட் இந்த்ரா ஷாஸ்ரைன் சுஸைய்னியின் உடல் மட்டுமே கிடைத்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நடைபெற்ற மரண விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
"இது ஒரு எதிர்பாராத துரதிர்ஷ்டவசமான சம்பவம்," என்று மரண விசாரணை அதிகாரியான கமலா பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
கடற்கரையில் குழந்தைகள் எப்படிப் பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பதைப் போதிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் அவர் வலியுறுத்தியிருந்தார்.
சிறுவன் புடேரா தாயாரிடம் கூறிவிட்டு கடற்கரைக்குச் சென்றி ருந்தான்.
கடற்கரையில் தனது நண்பர் களுடன் அவன் காற்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினான்.
மணலில் வீடு கட்டி விளையாடிய பிறகு நீச்சல் தெரியாத அவன் தன்னைச் சுத்தம் செய்து கொள்ள தண்ணீருக்குள் சென்றான்.
அப்போது ஏற்பட்ட வலுவான நீரோட்டத்தில் அவன் அடித்துச் செல்லப்பட்டான்.
சத்தம் கேட்டு அங்கு வந்த வழிப்போக்கர் ஒருவர் தண்ணீருக்குள் சென்று நண்பனை மீட்டு கரை சேர்த்தார்.
அங்கிருந்த மற்றொரு நபர், புடேராவை மீட்க தண்ணீருக்குள் இறங்கினார். ஆனால் தண்ணீரில் போராடிய புடேராவை அவரால் காப்பாற்ற முடியவில்லை.
புடேரா சிறிது நேரத்தில் காணாமல் போனதால் உதவி செய்ய வந்தவர் களைப்புடன் கரைக்குத் திரும்பினார்.
பிற்பகல் 3.30 மணி அளவில் தகவல் கிடைத்து அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படையினர் சிறுவனைத் ேதடினர். இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு அவனது உடல் கரையில் ஒதுங்கியது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு முன்பு அளித்த பேட்டியில் புடேரா அமைதியானவன், மற்றவர்களுடன் அதிகம் பேச மாட்டான் என்று அவனுடைய உறவினரான நூஸ் அஸ்மான் மார்வி கூறியிருந்தார்.
தாய், தந்தையிடம் அவன் நல்லவிதமாக நடந்துகொள்வான் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று மரண விசாரணை அறிக்கை வெளியிட்டபோது நீதிமன்றத்துக்கு சிறுவனின் தாயார் வந்திருந்தார்.
ஆனால் ஊடகங்களிடம் அவர் பேசவில்லை.

