தேசிய சேவையாளர் மரணம்; விசாரணை தொடங்கியது

தேசிய சேவையாளர் மரணம்; விசாரணை தொடங்கியது

1 mins read
1ec08c62-95fb-482b-8910-f5da38a1149e
தேசிய சேவையாளர் லியூ காய்(வலம்) பாதுகாப்புக்கு பொறுப்பு வகித்த ஓங் லின் ஜி(இடம்). படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

முழு­நேர தேசிய சேவை­யா­ள­ரான 22 வயது லியூ காய் மரண மடைந்­தது தொடர்­பான விசா­ரணை நேற்று தொடங்­கி­யது.

இந்த வழக்­கில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யைச் சேர்ந்த கேப்­டன் ஓங் லின் ஜி பாதுகாப்­பா­கச் செயல்­ப­டா­த­தால் அவ­ருக்கு மர­ணம் ஏற்பட்டதாகக் கூறப்­படு­கிறது.

ஆனால் தம் மீதான குற்­றச்­சாட்டை ஓங் லின் ஜி மறுத்­துள்­ளார்.

2018 நவம்­ப­ரில் நடந்த பயிற்­சி­யின்­போது 22 வயது லியூ 'லேண்ட் ரோவர்' வாக­னத்தை ஓட்­டிக் கொண்­டி­ருந்­தார். அப்­போது லியூ­வின் பாது­காப்­புக்கு பொறுப்பு வகிக்­கும் அதி­கா­ரி­யாக ஓங் லின் ஜி செயல்­பட்­டார். முன்­பு­றத்­தில் இருந்த பயோ­னிக்ஸ் கவச வாக­னத்­துக்­கும் லியூ ஓட்­டிச் சென்ற வாக­னத்­துக்­கும் இடையே 30 மீட்­டர் பாது­காப்பு இடை­வெளி இருப்பதை ஓங் லின் ஜி உறுதி செய்ய வேண்டும்

ஆனால் அதை­யும் மீறி லியூவை கவச வாக­னத்­தைக் கடந்து செல்­லு­மாறு ஓங் லின் ஜி உத்­த­ர­விட்­ட­தா­கக் கூறப்­படுகிறது. இதை ஏற்று லியூ செயல்பட்டபோது கவ­ச வாக­னம் மோதி­ லியூ மர­ண­ ம­டைந்­தார்.

ஓங்கை பிரதிநிதிக்கும் வழக்கறி ஞரான டியோ சூ கீ, சம்பவத்தன்று கவச வாகனமோட்டியவருடன் தமது கட்சிக்காரர் தொடர்புகொள்ள வேண்டிய விதிமுறை எதுவும் இல்லை என்று வாதிட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.