பாலியல் தொழில் செய்யும் பெண்களை ஏமாற்றி உடலுறவு கொண்ட மோசடி ஆசாமிக்கு ஏப்ரல் 20ஆம் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இளம்ெபண்களைத் தேடும் பணக்காரர்களை அறிமுகப்படுத்து வதாகக் கூறி அதற்கு முதலில் தான் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று கூறி குறைந்தது 11 பெண்களை ஏமாற்றி அவர் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தற்போது 39 வயதாகும் டி பியர்ஸ் வோங் (படம்) ஒப்புக்கொண்டார்.
இரண்டு பெண்கள் அவருடனான தொடர்பை துண்டிக்க முயற்சி செய்தபோது அவர்களுடைய நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வோங்குக்கு ஏப்ரல் 20ஆம் தேதி தண்டனை விதிக்கப்படவிருக்கிறது.

