புதிய அம்சங்களை வேகமாக அமலாக்கிய முகவைக்குப் பாராட்டு

சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு வளங்களை நிர்வகிக்க 2019 டிசம்பரில் தகவல்தொழில்நுட்ப முறை என்ற ஓர் அமைப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சுகாதார தகவல் முறை (IHiS) என்று குறிப்பிடப்படும் அந்த முகவையைச் சேர்ந்த ஒரு குழு, தனது தகவல்தொழில்நுட்ப முறையில் கிருமித் தொற்றை நிர்வகிக்க மேலும் பலவற்றை அடுத்த 12 மாதங்களில் உருவாக்கவேண்டும் என்று திட்டங்களை வகுத்திருந்தது.

ஆனால் சென்ற ஆண்டு ஜனவரியில் கொவிட்-19 தலைகாட்டியதை அடுத்து அந்தப் பணிகளை நான்கே மாதங்களில் குழு முடித்தது.

மருத்துவமனைகளைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள், மருத்துவமனை படுக்கைகளுக்கான தேவைகளையும் இதர சுகாதாரப் பராமரிப்பு வளங்களுக்கான தேவைகளையும் முன்னதாகவே கணித்து செயல்பட அந்தக் குழு உருவாக்கிய புதிய அம்சங்கள் உதவின.

‘நெருக்கடிகால தொழில்நுட்ப கதாநாயகர்கள்’ என்ற கருப்பொருளுடன் சிங்கப்பூர் கணினிச் சங்கம் இந்த ஆண்டில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இதற்காக அந்த முகவை நேற்று விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் தொழில்நுட்பங்களின் மூலமாக சமூகத்தில் ஆக்ககரமான விளைவுகளை ஏற்படுத்திய மக்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!