பாலர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என 40 பேர் வெளிப்புற நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக ஆரம்பகால பாலர் பருவ மேம்பாட்டு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. கேம்பிரிட்ஜ் பாலர் பள்ளி நேற்று முன்
தினம் மாணவர்களை பாசிர் ரிஸ் பூங்காவுக்கு அழைத்துச் சென்றது. இதனை
அந்தப் பள்ளிக் குழுமத்தின் இயக்குநர் உறுதி செய்தார். இயற்கையை ரசிப்பதற்காக தமது குழுமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றதாக அவர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் கூறினார். இவ்வாண்டு தொடக்கம் முதல் பாலர் பள்ளி மாணவர்
களின் வெளிப்புற நடவடிக்கைகள் அனு
மதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த முகவையின் பேச்சாளர், 50 பேர் வரை அடங்கிய குழுவைச் சேர்ந்தோர் குழந்தைகளாக இருப்பினும் பெரியவர்களாக இருப்பினும் பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்றார். பாசிர் ரிஸ் பூங்காவில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டனவா என்பதை விசாரித்து வருவதாகவும் அவர் சொன்னார்.

