கதவு கோளாறு: காலை உச்சநேரத்தில் தாமதமடைந்த பயணம்

கதவு கோளாறு: காலை உச்சநேரத்தில் தாமதமடைந்த பயணம்

2 mins read
69ea4e47-9476-480d-a75d-f9633a698415
காலை 9.36 மணிக்கு அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் காத்திருந்த பயணிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வடக்கு-தெற்கு எம்­ஆர்டி தடத்­தில் மரினா சௌத் பியர் நோக்­கிச் செல்­லக்­கூ­டிய ரயில் பய­ணி­கள் நேற்­றுக் காலை உச்­ச­நே­ரத்­தில் தாம­தத்­தைச் சந்­தித்­தனர்.

நடை­மே­டைக் கதவு ஒன்­றில் ஏற்­பட்ட கோளாற்­றால் ரயில்­கள் மெது­வா­கச் சென்­றன.

அங் மோ கியோ­வுக்­கும் பிரே­ட­லுக்­கும் இடைப்­பட்ட பய­ணத்­தில் பத்து நிமிட தாம­தம் இருப்­ப­தாக காலை 8.28 மணிக்கு எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் தனது டுவிட்­டர் செய்­தி­யில் கூறி­யது.

அதற்கு முன்­னர் 8.20 மணி­ய­ள­வில் ரயில் நிலை­யத்­தில் பயண தாம­தம் குறித்து அறி­விப்­பு­கள் செய்­யப்­பட்­டுக்­கொண்டு இருந்­த­தாக அர்­ஜுன் நாயர் என்­னும் பயணி 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தி­யா­ள­ரி­டம் தெரி­வித்­தார்.

பீஷான் நிலை­யத்­தில் கத­வுக் கோளாறு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அந்த அறி­விப்­பில் சொல்­லப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார். இயோ சூ காங் எம்­ஆர்டி நிலை­யத்­திலிருந்து ரயில்­கள் ஆமை வேகத்­தில் சென்­ற­தாக அந்த 26 வயது ஆட­வர் கூறி­னார்.

அத­னால் அங் மோ கியோ எம்­ஆர்டி நிலை­யத்­தில் இறங்கி கிட்­டத்­தட்ட 20 நிமி­டங்­கள் காத்­தி­ருந்­ த­தா­க­வும் அப்­போது பய­ணி­களை நிரப்­பிக்­கொண்டு இரு ரயில்­கள் சென்­ற­தைத் தாம் கண்­ட­தா­க­வும் மேலும் அவர் தெரி­வித்­தார்.

"ஏரா­ள­மா­னோர் காத்­தி­ருந்­த­னர். அவர்­களில் ஒரு சிலர் வரி­சை­யைப் புறக்­க­ணித்து ரயி­லில் ஏறி­னர்," என்­றார் அவர்.

தாம­தம் பத்து நிமி­டங்­க­ளுக்கு மேல் இருந்­த­தாக மேலும் சில பய­ணி­கள் தங்­க­ளது டுவிட்­ட­ரில் பதி­விட்­ட­னர். வேறு சிலர் வேலைக்­குச் செல்­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டு­விட்ட ஆதங்­கத்தை டுவிட்­ட­ரில் குறிப்­பிட்­ட­னர்.

"அங் மோ கியோ­வி­லி­ருந்து பீஷான் செல்ல 30 நிமி­டங்­கள் ஆனது. அத­னால் நான் தாம­த­மாக வேலைக்­குச் சென்­றேன். எவ்­வ­ளவு நேரம் பய­ணம் தாம­த­ம­டைந்­தது என்­னும் உண்­மைத் தக­வ­லைப் பல­ரும் சொன்­னால் நன்­றாக இருக்­கும்," என்று ஒரு பயணி 8.44 மணிக்­குப் பதி­வேற்­றிய டுவிட்­டர் தக­வல் குறிப்­பிட்­டது.

பின்­னர் 9.01 மணிக்கு பதி­வேற்­றப்­பட்ட 'வாயாடி' என்­னும் பெய­ரைத் தாங்­கிய டுவிட்­டர் தக­வல், ரயில்­கள் மெது­வா­கச் சென்­ற­தா­க­வும் ரயி­லில் ஏற கிட்­டத்­தட்ட 30 நிமி­டங்­கள் ஆன­தா­க­வும் கூறி­யது.

அதே­நே­ரம் 9.53 மணிக்கு எஸ்­எம்­ஆர்டி வெளி­யிட்ட டுவிட்­ட­ரில், அங் மோ கியோ­வுக்­கும் பீஷா­னுக்­கும் இடைப்­பட்ட பயண நேரத்­தில் ஐந்து நிமிட தாம­தம் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பின்­னர், அங் மோ கியோ­வுக்­கும் பிரே­ட­லுக்­கும் இடைப்­பட்ட பய­ணம் வழக்­க­நி­லைக்­குத் திரும்பி ­விட்­ட­தாக 4.03 மணிக்கு எஸ்­எம்­ஆர்டி தெரி­வித்­தது.