தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்து, சிறுமியைச் சீரழித்தவனுக்கு 28 ஆண்டு சிறை, 24 பிரம்படி

2 mins read

கட்­டா­யப்­ப­டுத்தி மதுவை வாயில் ஊற்றி, இரண்டு மணி நேர­மாக 13 வய­துச் சிறு­மி­யைப் பாலி­யல்­ரீ­தி­யாகச் சீர­ழித்த ஆட­வ­ருக்கு 28 ஆண்டு சிறைத்­தண்­ட­னை­யும் 24 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

காலாங் ரிவர்­சைடு பூங்­கா­வில் கடந்த 2017 அக்­டோ­பர் 24ஆம் தேதி இரவு 9 மணி முதல் 11 மணி வரை இந்­தச் சம்­ப­வம் அரங்­கே­றி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

முகம்­மது ஆலிஃப் அப் ரஹீம் எனும் அந்த 35 வயது ஆட­வர் தன் மீதான மூன்று குற்­றச்­சாட்டு­களை­யும் ஒத்­துக்­கொண்­டார்.

21 வய­தி­லேயே குற்­றம் புரி­யத் தொடங்­கிய ஆலிஃப், திருட்டு, ஏமாற்று, வழிப்­பறி, நம்­பிக்கை மோசடி, பாலி­யல் துன்­பு­றுத்­தல் போன்­ற­வற்­றுக்­காக 2007க்கும் 2014க்கும் இடைப்­பட்ட காலத்­தில் ஐந்து முறை சிறை­யில் அடைக்­கப்­பட்­டான்.

இப்­போது 16 வய­தா­கும் அச்­சி­றுமி, அந்த இரண்டு மணி நேர­மும் போரா­டி­னாள்; இடைவிடாது அழு­தாள்.

அவள் தப்­பிக்க முயன்­ற­போ­து எல்­லாம் ஆலிஃப் அவ­ளைத் தடுத்­த­து­டன், அவள் போட்ட சத்­தம் பிற­ருக்­குக் கேட்­கா­மல் இருக்க வாயை­யும் மூடி­னான். பாலி­யல் தாக்­கு­தலுக்­கு­ப்பின் அவளை அவன் இரு ­முறை மிரட்­டவும் செய்­தான்.

சம்­ப­வத்­திற்­குப்­பின் தனக்கு நேர்ந்த கொடூ­ரம் குறித்து தன் தோழி­ய­ருக்­கும் அத்தை ஒரு­வ­ருக்­கும் அவள் குரல்­வழி குறுஞ்­செய்தி அனுப்­பி­னாள். அந்த 'மாமா' தன்­னைச் சீர­ழித்­து­விட்­ட­தாக அழு­த­வாறே அச்­சி­றுமி கூறி­யது நீதி­மன்­றத்­தில் போட்­டுக்­காட்­டப்­பட்­டது.

ஆலி­ஃப்­பின் காத­லி­யி­னு­டைய மக­னும் அச்­சி­று­மி­யும் நண்­பர்­கள் எனக் கூறப்­பட்­டது. தன் காத­லி­யின் வீட்­டில் ஆலிஃப் அவ்­வப்­போது தங்­கி­ய­தா­க­வும் அச்­சி­றுமி அவனை 'மாமா' என அழைத்து வந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­பவ நாளன்று, காற்று வாங்கு­வ­தற்­காக காலாங் ரிவர்­சைடு பூங்­கா­விற்கு அச்­சி­றுமி சென்­றாள். அப்­போது அங்கு ஆலி­ஃப்பை தற்­செ­ய­லாக சந்­திக்­கவே, பானம் வாங்­கிக்­கொண்டு பூங்­கா­வில் சென்று பேசிக்­கொண்டு இருக்­க­லாம் என்று அவன் கூறி­னான்.

அங்­கி­ருந்த பட­குத்­து­றை­யின் ஓர­மாக அவர்­கள் இரு­வ­ரும் அமர்ந்­த­னர். பின்­னர் ஆலிஃப் தன் பையில் இருந்து 'வோட்கா'வை எடுத்­தான். அச்­சி­று­மிக்­கும் வேண்­டுமா எனக் கேட்க, அவள் 'வேண்­டாம்' என மறுத்­து­விட்­டாள்.

சில கோப்பை மது அருந்­தி­ய­பின், ஆலிஃப் முன்னே சாய்ந்து அச்­சி­று­மியை முத்­த­மிட்­டான். அதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த அச்­சி­றுமி, அங்­கி­ருந்து நகர முயன்­றாள். ஆனால், அவ­ளது கைபேசி­யைப் பிடுங்­கிக்­கொண்ட ஆலிஃப், பின்­னர் அவள் மீது ஏறி அமர்ந்து மான­பங்­கம் செய்­தான்.

பூங்­கா­வின் தனி­மை­யான பகு­தி­யில் அவர்­கள் இருந்­த­தால் அச்­சி­று­மி­யின் உத­விக்­கு­ரல் எவர்க்­கும் கேட்­க­வில்லை. அச்­சி­றுமி கத்­தவே, ஆலிஃப் வலுக்­கட்­டா­ய­மாக அவ­ளது வாயைத் திறந்து, மதுவை ஊற்­றி­னான்.

அங்­கி­ருந்து அச்­சி­றுமி தப்பி ஓட முயல, ஆலிஃப் அவளை வேலி­மீது தள்­ளி­விட்டு, தடுத்­தான். பின்­னர் அவ­ளைத் தரைப்­ப­கு­திக்கு இழுத்­துச் சென்று சீர­ழித்­தான்.

அவனது பாலியல் தாக்குதல் அச்சிறுமியின் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டதாக அரசாங்க வழக்கறிஞர் கிரகரி கான் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.