குடும்ப வன்செயல், தீவிரவாத மனப்போக்கு மிரட்டல்: அரசு மட்டுமே தீர்வு காண இயலாது

குடும்ப வன்செயல், தீவிரவாத மனப்போக்கு மிரட்டல்: அரசு மட்டுமே தீர்வு காண இயலாது

2 mins read

குடும்ப வன்­செ­யல்­கள், இணை­யம் வழி­யான தீவி­ர­வாத மனப்போக்கு மிரட்­டல் போன்ற பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிக்க மேலும் பல­வற்­றைச் செய்ய முடி­யும் என்று உள்­துறை துணை அமைச்­சர் ஃபைசால் இப்­ரா­ஹிம் தெரி­வித்­துள்­ளார்.

இருந்­தா­லும் அர­சாங்­கம் மட்டும் அத்­த­கைய பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கண்­டு­விட முடி­யாது என்று தேசிய வளர்ச்சி துணை அமைச்­ச­ரு­மான அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய கல்­வி­மான்­கள் மற்­றும் சமய ஆசி­ரி­யர் சங்­கம் ஏற்­பாடு செய்த மாநாட்­டில் உரை­யாற்­றிய அவர், இத்­த­கைய பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிக்க எல்­லா­ரும் சேர்ந்து பாடு­பட வேண்டி இருக்­கிறது என்­றார்.

சமூ­கத் தலை­வர்­கள், சம­யத் தலை­வர்­கள் ஆகி­யோ­ரு­டன் சேர்ந்து பாடு­பட்டு மேலும் பல­வற்­றைச் செய்ய முடி­யும் என்று தான் கரு­து­வ­தாக இணைப் பேரா­சி­ரி­யர் ஃபைசால் கூறி­னார்.

அத்­த­கைய பிரச்­சி­னை­கள் பற்றி மேலும் கலந்துரையாடல்கள் நடக்க வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார். சமூ­கத்­தி­டம் இருந்து தக­வல்­க­ளைத் திரட்­டும்படி­யும் அதி­க­ள­வில் சமூ­கத்­தி­னரை ஈடு­ப­டுத்­தும்படி­யும் சமூ­கத் தலை­வர்­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

இப்­படிச் செய்­தால் மட்­டுமே நாம் நம்மை எதிர்­நோக்கி இருக்­கும் சவால்­களை உண்­மை­யி­லேயே சமா­ளிக்க முடி­யும் என்­றார் அவர்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு சென்ற மாதம் 24 மணி­நேர தேசிய தொலை­பேசி எண் உதவிச் சேவை ஒன்றைத் தொடங்­கி­யது. அதன்­ மூ­லம் பொது­மக்­கள் குடும்ப வன்­செ­யல்­கள் பற்­றி­யும் இதர கொடு­மை­கள் குறித்­தும் தெரி­யப்­ப­டுத்­த­லாம் என்­பதை அமைச்­சர் நினை­வூட்­டி­னார்.

இணைய தீவி­ர­வாத மனப்­போக்கு மிரட்­டல் பற்றி கருத்­துரைத்த அவர், அமை­தியை நிலை­நாட்டி வர தன்­னு­டைய முயற்­சி­களை அதி­கப்­ப­டுத்த வேண்­டிய தேவை சிங்­கப்­பூ­ருக்கு இருந்­திருப்­பதா­கக் கூறி­னார்.

அரசு, கடந்த ஜன­வ­ரி­யில் 16 வயது பதின்ம வயது இளை­ஞரை யும் இந்த மாதத் தொடக்­கத்­தில் 20 வயது இளை­ஞர் ஒரு­வரையும் உள்­நாட்டு பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­தது.

சிங்­கப்­பூ­ரில் சம­யங்­க­ளுக்கு இடையே நல்ல நட்­பு­ற­வும் நம்­பிக்­கை­யும் நில­வு­கிறது. நம் இளை­யர்­களை ஈடு­ப­டுத்தி நல்ல உறவை பேணி வளர்க்க தொடர்ந்து ஒன்­றாக நாம் பாடு­பட வேண்­டும் என்­றும் அமைச்சர் தெரி­வித்­தார்.