மாணவர்களுக்கும் விரைவில் தடுப்பூசி போடக்கூடிய சூழல் ஏற்படக்கூடும் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
தற்போது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியை 16 வயதினரும் அதற்கு மேற்பட்ட வயதினரும் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்
படுகிறார்கள் என்றார் அவர்.
"ஆயினும், குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் உலகளவில் நடைபெறுகின்றன. அதன் ஆற்றலையும் பாதுகாப்புத் தன்மையையும் சிங்கப்பூர் உற்றுநோக்கி வருகிறது," என்று சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த காணொளி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
"சிங்கப்பூரில் உள்ள குழந்தைகளும் தடுப்பூசியின் பயனைப் பெறும் வகையில் அதற்கான அனுமதியை வழங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கருதுகிறேன்," என அவர் குறிப்பிட்டுள்ளார். 'ஆஸ்க் மீ எனிதிங்' என்னும் கேள்வி பதில் அங்கத்தில் சமூக ஊடகத்தினர் எழுப்பிய வினாக்களுக்கு அவர் பதிலளித்தார்.

