லோயாங் அவென்யூவில் பேருந்து ஒன்றின் அடியில் மாட்டிக்கொண்ட 31 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை பின்னேரத்தில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தின் தொடர்பில் 63 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மரணம் விளைவிக்கும் அளவுக்குக் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் கூறியது.
லோயாங் அவென்யூ-பாசிர் ரிஸ் டிரைவ் 1 சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து இரவு 10.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

