60,000 பேர் முழுமையாக குணமடைந்தனர்
சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,196.
அதே நேரம் 60,007 பேர் தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு சனிக்கிழமை இரவு தெரிவித்தது. அன்றைய தினத்தில் மட்டும் மூவர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் 17 பேரும் சமூக வசிப்பிடங்களில் 115 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் எவரும் இல்லை. சனிக்
கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட 17 பேரும் இந்தியா, மியன்மார், ரோமானியா, பங்ளாதேஷ், இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் இரு வெளிநாட்டுப் பணிப்பெண்களும் அடங்குவர்.
கடந்த வாரம் முழுவதும் சமூக அளவில் யாருக்கும் கிருமித் தொற்று ஏற்படவில்லை. அதற்கு முந்திய வாரத்தில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டது.

