நான்கு கி.மீ. ரயில் பசுமைப் பாதை மீண்டும் திறப்பு

நான்கு கி.மீ. ரயில் பசுமைப் பாதை மீண்டும் திறப்பு

2 mins read
9f387f1a-af99-4012-8f98-5f4c3baeb605
(இடது படம்) ஹீல்வியூவுக்கும் புக்கிட் தீமாவுக்கும் இடைப்பட்ட ரயில் பசுமைப் பாதையில் நேற்று நடந்து சென்றார் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. (வலது படம்) ஹின்டிட் வாக் சாலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுரங்க நடைபாதை. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

ஹில்­வி­யூ­வுக்­கும் புக்­கிட் தீமா­வுக்­கும் இடைப்­பட்ட நான்கு கிலோ­மீட்­டர் தூரம் கொண்ட ரயில் பசு­மைப் பாதை புதிய அம்­சங்­க­ளு­டன் மீண்­டும் திறப்­பட்­டுள்­ளது.

அங்கு ரயில் கட்­ட­மைப்பு வச­தி­க­ளைப் பாது­காப்­ப­து­டன் அந்­தப் பகு­திக்கு வரு­கை­யா­ளர்­கள் செல்­வ­தற்­கு­ரிய வழி­களும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இரு ரயில் பாலங்­க­ளுக்கு இடைப்­பட்ட இந்­தப் பசு­மைப் பாதை மத்­திய பசு­மைப் பாதை என்று அழைக்­கப்­ப­டு­கிறது. இந்­தப் பாதை புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்­காக 2019 முதல் மூடப்­பட்டு இருந்­தது.

2017ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்ட ரயில் பசு­மைப் பாதை நண்­பர்­கள் சமூ­கக் குழு­வு­டன் நேற்­றுக் காலை தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ அந்­தப் பாதை­யில் நடந்து சென்­றார்.

சிங்­கப்­பூ­ரை­யும் மலே­சி­யா­வை­யும் இணைக்­கும் முன்­னைய ரயில் பாதை, 2011லிருந்து செயல்­பாட்டை நிறுத்­திக்­கொண்ட பிறகு அது பசு மைப் பாதை­யாக மாற்­றப்­பட்­டது.

"இந்­தப் பசு­மைப் பாதை­யில் என்­னென்ன புதிய அம்­சங்­கள் சேர்க்­கப்­ப­ட­லாம் என்று சிங்­கப்­பூ­ரர்­கள் கூடிய கருத்­து­கள் சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­க­ளால் கருத்­தில் கொள்­ளப்­பட்டு, திட்­டங்­கள் வகுக்­கக்­கப்­பட்­டன," என்று முன்பு ஒளிப்­ப­திவு செய்­யப்­பட்ட காணொளி உரை­யில் அமைச்­சர் லீ கூறி­னார்.

"பசு­மைப் பாதை­யின் ரயில் மர­பு­டைமை அம்­சங்­கள் கட்­டிக்­காக்­கப்­பட்­டன. அதில் நான்கு பாலங்­க­ளைச் செப்­ப­ணிட்டு, புதுப்­பிக்­கும் பணி­யும் அடங்­கும்.

"இரண்­டா­வ­தாக, பாதை நெடு­கி­லும் உள்ள பல்­லு­யிர் மற்­றும் பசுமை அம்­சங்­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டன. பாதை நெடு­கி­லும் பழ­மை­யான செடி­கள் நடப்­பட்­டன. அங்கு விலங்­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்­கா­மல் இருக்க, அதிக வெளிச்­சம் இல்­லாத விளக்­கு­கள் பொருத்­தப்­பட்­டன.

"பசு­மைப் பாதை­யைப் பயன்­படுத்­தும் குடி­யி­ருப்­பா­ளர்­கள், வரு­கை­யா­ளர்­க­ளின் வச­திக்­காக இன்­னும் அதி­க­மான நுழைவு வழி­கள் அமைக்­கப்­பட்­டன," என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

"மொத்­தம் 24 கிலோ­மீட்­டர் தூரம் கொண்ட முழு பசு­மைப் பாதை­யின் இயற்கை, மர­பு­டைமை, மேம்­பாடு ஆகிய மூன்று அம்­சங்­க­ளி­லும் அதிக கவ­னம் செலுத்­தப்­பட்­டது.

"இயற்­கைக்­கும் பொழு­து­போக்­குக்­கும் இடத்தை ஒதுக்­கு­வது போக, அங்­குள்ள வர­லாற்று உள்­கட்­ட­மைப்பு பாது­காக்­கப்­பட்­டது. பசு­மைப் பாதை­யின் நெடு­கி­லும் உள்ள நிலங்­கள் வீடு­கள், வேலை­கள், வச­தி­கள் உரு­வாக்­கத்­துக்­கான எதிர்­கால மேம்­பாட்­டுக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­படும்," என்­றும் திரு லீ விவ­ரித்­தார்.

பசு­மைப் பாதை­யில் உள்ள மேம்­பா­டு­க­ளைத் தவிர, பாத­சா­ரி­கள் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய புதிய சுரங்க நடை­பா­தை­யும் அங்கு அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­ய­மும் தேசிய பூங்­காக் கழ­க­மும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

பழைய ரயில் பாலத்­துக்­குக் கீழ் அமைந்­துள்ள 3.6 மீட்­டர் குறுக்­க­ளவு கொண்ட சுரங்க நடை­பாதை, ஹின்­டிட் ரோட்­டுக்­குப் பக்­கத்­தில் அமைக்­கப்­பட்­டது.

அதன் மூலம் புக்­கிட் தீமா இயற்கை வனப்­ப­கு­தி­யைப் பயன்­ப­டுத்­தும் பாத­சா­ரி­கள் அந்­தச் சாலை­யைப் பயன்­ப­டுத்­தா­மல் சுரங்க நடை­பா­தை­யைப் பாது­காப்­பா­கப் பயன்­ப­டுத்த முடி­யும்.