தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிள்ளைகள் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு

2 mins read
d1f3b768-e5ec-44d3-9961-f2ce21c4f779
இளம் பிள்ளைகளால் தங்கள் பிரச்சினைக்கு உதவி கேட்க தெரியாது என்று கூறப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அதிர்ச்சி தரக்­கூ­டிய சம்­ப­வங்­க­ளால் பிள்­ளை­கள் கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திப்­ப­டு­வது 2017ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு 30% அதி­க­ரித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய பிள்­ளை­கள், சாலைப் போக்­கு­வ­ரத்து விபத்­து­கள், பாலி­யல் தொல்­லை­கள், துன்­பு­றுத்­து­தல், குடும்ப வன்­முறை, அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழப்­பது என அதிர்ச்சி தரக்­கூ­டிய பல்­வேறு சம்­ப­வங்­களு­டன் தொடர்­புள்­ள­வர்­க­ளாக இருக்­கக்­கூ­டும்.

இதனை எதிர்­கொள்ள முறை யான ஆத­ரவு இல்லை என்­றால், இத்­த­கைய அதிர்ச்சி பிள்­ளை­களை எதிர்­கா­லத்­தில் மன­ந­லச் சுகா­தா­ரப் பாதிப்­புக்கு இட்­டுச் செல்­ல­லாம். கவலை, மன அழுத்­தம், பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு போன்ற பிரச்சினைகள் வரக்கூடும் என்று கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­மனை­யின் உளவியல் சமூக அதிர்ச்சி ஆதரவு சேவைப் பிரிவின் தலைமை உளவியல் நிபுணர் திருவாட்டி ஜெமி சென் நேற்று கூறினார்.

அவரது பிரிவு மூன்று முதல் 18 வயதுள்ள சிறுமிகள், பெண்கள் ஆகியோருக்கு ஆதரவு அளிக்கிறது.

கொவிட்-19 கொள்ளைநோய், அதிர்ச்சி தரக்­கூ­டிய சம்­ப­வங்­க­ளால் பாதிக்கப்பட்ட அதிகமான பிள்­ளை­கள் கேகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குக் காரணமாக இருக்கக்கூடுமா என்ற கேள்விக்கு உறுதியாகப் பதிலளிக்க முடியாது சொன்ன திருவாட்டி சென், தனது பிரிவு அண்மையில் குடும்ப வன்முறை போன்ற 'விபத்து அல்லாத காயங்கள்' காரணமாக அதிகமான பிள்ளைகளைக் கையாண்டதைச் சுட்டினார்.

"கொள்­ளை­நோய் கார­ண­மாக அதி­க­மா­னோர் வீட்­டி­லேயே இருப்­ப­தால், அங்கு மாற்­றங்­க­ளா­லும் மன உளைச்­சல்­க­ளா­லும் பிள்­ளை­க­ளுக்கு அதிர்ச்சி தரக்­கூ­டிய சம்­ப­வங்­கள் நிக­ழக்­கூ­டும்.

"ஆனால், பெரி­ய­வர்­க­ளைக் கையா­ளு­வ­தைப் போல சிறு­வர்­க­ளைக் கையாள முடி­யாது. அதற்கு முற்­றி­லும் மாறு­பட்ட அணு­கு­முறை தேவை," என்­றார் திரு­வாட்டி சென்.

ஆக அவ­ரது பிரி­வி­னர், வரை­தல், விளை­யாட்­டு­கள், விளை­யாட்­டுப் பொருட்­கள் போன்­ற­வற்­றைப் பயன்­ப­டுத்தி அவர்­க­ளுக்­குள்ள பிரச்­சி­னையை அறிந்­து­கொள்­கின்­ற­னர். பின்­னர் அவர்­க­ளின் அதிர்ச்­சி­யைப் போக்­கும் முயற்­சி­யில் இறங்­கு­கின்­ற­னர்.

உதா­ர­ணத்­துக்கு, நீர்க்குமிழ்­கள் ஊது­தல், அவர்­க­ளின் வயிற்­றில் விளை­யாட்­டுப் பொருளை வைத்து, அவர்­கள் மூச்சை உள்­ளி­ழுத்து விடும்­போது அது ஏறி இறங்­கும் விளை­யாட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

மேலும், நெருக்­கடி நிலை என்­றால் என்ன, அதன் மூலம் எப்­ப­டிப்­பட்ட அனு­ப­வங்­களை அவர்­கள் பெறக்­கூ­டும் என்­பதை விளக்­கும் இரு சிறு உயி­ரோட்­ட­மான காணொ­ளி­களை அப்­பி­ரி­வி­னர் உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

அப்­ப­டிப்­பட்ட அதிர்ச்சி தரக்­கூடிய சம்­ப­வங்­களை அனு­ப­விக்­கும்­போது எப்­படி உதவி நாட­லாம் மோன்ற உத­விக் குறிப்­பு­க­ளை­யும் அவர்­கள் புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய வகை­யில் சொல்­லிக்­கொ­டுக்­கின்­ற­னர்.

இது குறித்து கருத்து தெரி­வித்த கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யின் உள­வி­யல் சமூக அதிர்ச்சி ஆத­ரவு சேவைப் பிரி­வின் மூத்த உள­வி­யல் நிபு­ணர் திரு­வாட்டி கோ சின் எர், "நாங்­கள் அவர்­க­ளுக்­குக் காட்­டும் காணொ­ளி­யில் உள்­ளூர் உதா­ர­ணங்­க­ளைப் பயன்­ப­டுத்தி, பிள்­ளை­க­ளுக்கு விளக்­கு­வோம்.

"பிள்­ளைக்கு அதிர்ச்சி தரக்­கூடி­யவை எவை என்­பதை பிள்­ளை­க­ளின் பரா­ம­ரிப்­பா­ளர்­கள் புரிந்­து­கொண்­டால், அவர்­கள் எளி­தில் பிள்­ளை­க­ளி­டம் காணப்­படும் மாற்­றத்­தைக் கண்டு பிடித்­து­வி­ட­லாம். பிள்­ளை­களும் அதற்­கு­ரிய சிகிச்சை பெற சம்­ம­திக்க வாய்ப்­புண்டு," என்­றார் திரு­வாட்டி கோ.