மூன்று நிகழ்ச்சிகளை நடத்த அனுமதித்ததால் திருமணக் கூடத்தை 20 நாட்கள் மூட உத்தரவு

மூன்று நிகழ்ச்சிகளை நடத்த அனுமதித்ததால் திருமணக் கூடத்தை 20 நாட்கள் மூட உத்தரவு

2 mins read
2f360527-d846-4a11-9d5e-0b51ab2c72c6
தி ஆரஞ்ச் பால்ரூம் திருமணக் கூடம் ஏப்ரல் 10 வரை மூடப்படும். ஒரு திருமண ஜோடி, 275 பேருடன் மூன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்த அந்தக் கூடம் அனு மதித்தது. படம்: பெரித்தா ஹரியான் -

'தி ஆரஞ்ச் பால்­ரூம்' என்ற திரு­மணக்கூடத்தை 20 நாட்­கள் மூடும்­படி உத்­த­ர­வி­டப்­பட்டுள்ளது.

ஒரு திரு­மண ஜோடி, 275 பேரை வர­வ­ழைத்து மூன்று வர­வேற்பு நிகழ்ச்­சி­களை நடத்த அந்­தத் திரு­மணக்கூடம் அனு­மதி அளித்­ததே இதற்­கான கார­ணம்.

பாது­காப்பு விதி­மு­றை­களை மீறி­ய­தற்­காக அந்­தக் கூடத்­திற்கு இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு இருக்­கிறது. கேலாங்­கில் உள்ள தஞ்­சோங் காத்­தோங் காம்ப்­ளக்ஸ் கட்­ட­டத்­தின் மூன்­றா­வது மாடி­யில் அமைந்து இருக்­கும் அந்­தக் கூடத்தை மார்ச் 22 முதல் ஏப்­ரல் 10 வரை மூடி­விட வேண்­டும்.

சிங்­கப்­பூர் நில ஆணை­யம் நேற்று அறிக்­கை­யில் இந்த விவரங்­க­ளைத் தெரி­வித்­தது.

பாது­காப்பு இடை­வெளி தூதர்கள் அந்த இடத்­தில் ஜன­வரி 30ஆம் தேதி சோதனை நடத்­தி­னர். அங்கு பிற்­ப­கல் 1.30 மணிக்­கும் மாலை 4.30 மணிக்­கும் இரண்டு வர­வேற்பு விருந்து நிகழ்ச்சி­களை ஒரு திரு­மண ஜோடி நடத்­தி­யதை அவர்­கள் கண்­ட­னர்.

மேலும் புலன்­வி­சா­ரணை நடத்­தப்­பட்­டது. அன்­றைய நாளில் மூன்று வர­வேற்பு நிகழ்ச்­சி­களில் ஏறத்­தாழ 300 விருந்­தி­னர்­களை உப­ச­ரிக்க ஏற்­பா­டு­கள் அங்கு இடம்­பெற்று இருந்­தது தெரி­ய­வந்­தது.

சட்­டத்­தின்படி, திரு­மண ஜோடி­ கள், ஒரு திரு­மண வர­வேற்பு நிகழ்ச்­சியை மட்­டும்­தான் நடத்த முடி­யும். அதில் திரு­மண ஜோடி­உட்­பட 100 பேருக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் கலந்­து­கொள்­ளக் கூடாது.

கொவிட்-19 விதி­மு­றை­கள் மீறப்­பட்டு இருக்­கின்­ற­னவா என்­பதைக் கண்­டு­பி­டிக்க புலன்­வி­சா­ர­ணை­கள் தொடர்­வ­தாக ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

திரு­மண ஏற்­பாட்­டா­ளர்­கள், திரு­ம­ணக்கூடங்­களை நடத்­து­வோர், தனிப்­பட்­ட­வர்­கள் யாராக இருந்­தா­லும் பாது­காப்பு விதி­மு­றை­களை மீறி­னால் அதை கடு­மை­யான ஒன்­றாக தான் கரு­து­வ­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டுள்­ளது.

திரு­மண நிகழ்ச்­சி­களில் சம்­பந்­தப்­பட்டு இருப்­ப­வர்­கள், திரு­மணத்­துக்குத் திட்­ட­மி­டும் மண­மக்­கள் எல்­லா­ரும் விதி­மு­றை­களை மீறா­மல் நடந்­து­கொண்டு சமூ­கத்­தின் நல­னை­யும் நல்­வாழ்­வை­யும் பாது­காக்க வேண்­டும் என்று அந்த ஆணை­யம் வலி­யு­றுத்­திக் கூறி இருக்­கிறது.

தி ஆரஞ்ச் பால்­ரூம் கூடத்­தில் சென்ற ஆண்­டில் பல­ருக்­கும் கொவிட்-19 கிருமி தொற்­றி­யி­ருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது குறிப் பிடத்தக்கது.