தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2020ல் 68 பேட்டரி வாகன தீ விபத்துகள்: 3ல் 2 பங்குக்கும் அதிகமான சம்பவங்கள் குடியிருப்புக் கட்டடங்களில் நிகழ்ந்தன

2 mins read
a7ce7486-2baa-49ba-a2a3-b7071a891dee
2020 ஜூலை 22ஆம் தேதி ஆடம் (உண்மை பெயர் அல்ல) என்பவரின் வீட்டில் அவருடைய மின்சார சைக்கிளின் பேட்டரி வெடித்ததால் படுக்கை அறை சேதமடைந்தது. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை -

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்­டில் பேட்டரி சைக்­கிள்­கள் மற்­றும் மின்ஸ்­கூட்­டர்­கள் உள்­ளிட்ட நாட­மாட்­டச் சாத­னங்­கள் கார­ண­மாக மூண்ட தீச் சம்­ப­வங்­கள் எண்­ணிக்கை 68 என்று சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை அண்­மை­யில் வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வ­ந்தது.

அந்­தச் சம்­ப­வங்­களில் மூன்­றில் இரண்டு பங்­கிற்­கும் அதி­க­மா­னவை குடி­யி­ருப்பு இடங்­களில் நிகழ்ந்து இருக்­கின்­றன.

கடந்த 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஒட்­டு­மொத்­த­மாக இவை குறைந்து இருக்­கின்­றன என்­றா­லும் இத்­த­கைய சம்­ப­வங்­கள் இன்­ன­மும் கவலை தரு­ப­வை­யாக இருக்­கின்­றன என்று குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­துள்­ளது.

இத்­த­கைய தீச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் அழைப்பு வந்­ததை அடுத்து அந்த இடங்­க­ளுக்­குச் சென்று தற்­காப்­புப் படை புலன்­விசா­ரணை நடத்­தி­ய­போது, விதி­மு­றைக்கு உட்­ப­டாத சாத­னங்­கள்­தான் தீ விபத்­துக்குக் கார­ணம் என்­பது தெரி­ய­வந்­தது.

சட்­ட­வி­ரோ­த­மாக மாற்­றப்­பட்ட சாத­னங்­களும் பொருத்­த­மில்­லாத மின் இணைப்­புச் சாத­னங்­களும் கார­ண­மாக இருந்­த­தாக இந்­தப் படை தெரி­வித்­துள்­ளது.

சிலர் அசல் பேட்­ட­ரி­க­ளுக்­குப் பதி­லாக வேறு பேட்­ட­ரி­களை வாக­னங்­களில் பொருத்­திக்கொள்­கி­றார்­கள். மின் இணைப்­பை­யும் மாற்­று­கி­றார்­கள். பயன்­ப­டுத்­தப்­ப­டாத பேட்­ட­ரி­கள் பல நாட்­க­ளுக்­குப் பிறகு கெட்­டுப்­போய்­வி­டும். காலப்­போக்­கில் அத­னால் பாதிப்­பு­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்று இந்­தப் படை தெரி­வித்­தது.

தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­களில் சட்­ட­வி­ரோ­த­மாக மாற்­றங்­களைச் செய்ய வேண்­டாம் என்று இந்­தப் படை பொது­மக்­களைக் கேட்­டுக்­கொண்­டது.

தேவைப்­பட்­டால் அசல் சாத­னங்­களை மட்­டும் மாற்றி பொருத்­திக் கொள்­ளும்­ப­டி­யும் அது ஆலோசனை கூறி­யது. சாத­னங்­களும் பேட்­ட­ரி­களும் குறிப்­பிட்ட காலங்­க­ளுக்­குத்­தான் பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

கெட்­டுப்­போன அல்­லது அதிக காலம் பயன்­ப­டுத்­தப்­ப­டா­மல் இருக்­கின்ற சாத­னங்­க­ளை­யும் பேட்­ட­ரி­களை­யும் முறை­யாக அப்­பு­றப்­ப­டுத்த வேண்­டும் என்று தற்காப்புப் படை வலியுறுத்திக் கூறியது.

அவற்றை நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் பட்­டி­ய­லிட்டு உள்ள மின்­னி­யல் கழி­வுப்­பொ­ருள் மறு­புழக்க நிறு­வ­னங்­க­ளி­டம் ஒப்­படைக்க வேண்­டும் என்­றும் இந்­தப் படை தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் முழு­வ­தும் உள்ள 80க்கும் மேற்­பட்ட இடங்­களில் அவற்றை ஒப்­ப­டைக்­க­லாம். அந்த இடங்­களை கேஜி­எஸ் என்ற நிறு­வனம் நிர்­வ­கித்து வரு­கிறது.

போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர், பேட்­டரி சைக்­கிள் மற்­றும் பேட்­ட­ரி­யில் செயல்­படும் தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­க­ளுக்­கான புதிய இறக்கு­மதி கட்­டுப்­பா­டு­கள் பற்றி இந்த மாதத் தொடக்­கத்­தில் அறி­வித்­தார்.

அந்­தக் கட்­டுப்­பா­டு­கள் இந்த ஆண்­டின் முதல்­பா­தி­யில் நடப்­புக்கு வரு­கின்­றன. பொருத்­த­மில்­லாத சாத­னங்­கள் இறக்­கு­ம­தி செய்­யப்­படு­வ­தைத் தடுப்­பது இதன் நோக்­கம்.

இத்­த­கைய தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­களை அதி­கா­ரி­கள் தொடர்ந்து பரி­சோ­தித்து கண்­காணித்து வரு­வார்­கள். சட்­ட­விரோ­த­ திருத்­தங்­கள் இருந்­தால் உரிய நட­வ­டிக்­கை­களை அவர்­கள் எடுப்­பார்­கள் என்றும் அமைச்­சர் தெரி­வித்து இருந்­தார்.