புதிதாக 12 பேருக்குத் தொற்று; எல்லாருமே இங்கு வந்தவர்கள்

புதிதாக 12 பேருக்குத் தொற்று; எல்லாருமே இங்கு வந்தவர்கள்

1 mins read
8903e5d1-e620-4d0d-aaad-6f989fea8109
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­க­ளை­யும் சேர்த்து கிருமி தொற்­றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை 60,208 ஆகி­யது.

புதி­தாக கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட அனை­வ­ருமே வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்­த­வர்­கள். தனி­மை­யில் இருக்க வேண்­டும் என்று அவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

சமூ­கத்­தி­லும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு விடு­தி­யி­லும் புதிதாக நேற்று யாருக்­கும் தொற்று இல்லை.

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யும் புதி­தாக 12 பேருக்கு தொற்று உறு­திப்­படுத்­தப்­பட்­டது. அவர்­களில் நான்கு பேர் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து கப்­பல் மூலம் வந்த கப்பல் ஊழி­யர்­கள் ஆவர்.

தரை­யி­றங்­கா­ம­லேயே அவர்­களுக்குக் கப்­ப­லி­லேயே பரி­சோதனை நடத்­தப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அந்த 12 பேருக்­கும் தனிமை உத்­த­ரவு ஏற்­கெ­னவே பிறப்­பிக்­கப்­பட்­டது.

இந்­தி­யா­வில் இருந்து வந்த சிங்­கப்­பூ­ர­ரான 23 வயது ஆடவர் ஒரு­வ­ரும் அந்த 12 பேரில் அடங்­கு­வார். மொத்­தத்­தில் புதிய சமூகத்­தொற்று கடந்த வாரம் பூஜ்­ஜி­ய­மா­கக் குறைந்­தது.

ஞாயிற்­றுக்­கி­ழமை 16 பேர் குண­ம­டைந்­த­னர். அவர்­க­ளை­யும் சேர்த்து மொத்­தம் 60,023 பேர் முற்­றி­லும் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள். 18 பேர் மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். இதர 110 பேர் சமூக நல்­வாழ்வு நிலை­யங்­களில் குண­மடைந்து வரு­கி­றார்­கள்.

கொவிட்-19 கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் 30 பேர் மாண்­டு­விட்­ட­னர். தொற்று இருந்தும் இதர கார­ணங்­க­ளால் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 15.