தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகளாக 204 பேர் பொறுப்பேற்றுக்கொண்டனர்

2 mins read
7f64ef37-4261-46e8-b7af-7f53b93c6658
-

சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை அதி­கா­ரி­க­ளாக நேற்று முன்­தி­னம் 204 பேர் பொறுப்­பேற்­றுக்­கொண்­ட­தாக தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பத­வி­யேற்­புச் சடங்­கில் அந்­தப் பயிற்சி அதி­கா­ரி­கள் சடங்­கு­பூர்வ வாள்­க­ளை­யும் நிய­ம­னக் கடி­தங்­களை­யும் பெற்­றுக்­கொண்­ட­னர்.

இந்த அணி­வ­குப்­புச் சடங்கை மேற்­பார்­வை­யி­டும் அதி­கா­ரி­யாக கலா­சார, சமூக இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் ஆற்­றிய உரை, காணொ­ளிப் பதி­வாக சடங்­கில் காண்­பிக்­கப்­பட்­டது.

அதில் பேசிய அவர், கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லில் இணை­யப் பாது­காப்பு மிரட்­டல்­கள் உள்­ளிட்ட பாது­காப்­புச் சவால்­கள் தொடர்ந்து நீடித்து அவை உரு­மா­றி­யும் வரு­வ­தா­கச் சொன்­னார்.

இணை­யச் சூழ­லில் சில­ரி­டம் தீவி­ர­வா­தச் சிந்­தனை ஏற்­பட்­டுள்­ள­தால் பயங்­க­ர­வாத மிரட்­ட­லும் தொடர்ந்து நீடித்து வரு­வதை அமைச்­சர் எட்வின் டோங் சுட்­டி­னார்.

பரு­வ­நிலை மாற்­ற­மும் சிங்­கப்­பூ­ருக்கு மற்­றொரு சவா­லாக விளங்­கு­வ­தா­கக் கூறிய அவர், 'சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் 2030'ன்கீழ் தற்­காப்பு அமைச்­சும் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யும் சுற்­றுச்­சூ­ழ­லுக்­காக அவற்­றின் பங்கை ஆற்­றும் என்று தெரி­வித்­தார்.

"பாது­காப்­புச் சூழல் தொடர்ந்து உரு­மா­றி­னா­லும், சிங்­கப்­பூ­ரை­யும் நமது வாழ்­வு­மு­றை­யை­யும் தற்­காப்­ப­தில் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யின் குறிக்­கோள் மாறாது.

"சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யின் வலிமை நமது அதி­ந­வீன ஆயு­தங்­களில் மட்­டு­மல்­லா­மல் நமது சேவை­யா­ளர்­க­ளின் வைராக்­கி­யத்­தி­லும் அடங்­கி­யுள்­ளது," என்று திரு டோங் கூறி­னார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை அதி­கா­ரி­க­ளின் கட­மை­யும் தொடர்ந்து மாறா­மல் இருப்­பதை அவர் சுட்டி­னார்.

முன்­னு­தா­ர­ண­மா­கத் திகழ்ந்து தேசிய சேவை­யா­ளர்­களை வழி­ந­டத்­து­வ­தும் உயர்­தர நிலைக்கு அவர்­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளிப்­ப­தும் அவர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­ப­தும் அதி­கா­ரி­க­ளின் கட­மை­களில் அடங்­கும் என்று சட்ட இரண்­டாம் அமைச்­ச­ரு­மான திரு டோங் சொன்­னார்.