சிங்கப்பூரர்கள் பரிவுமிக்கவர்கள் என்பதைக் காட்டும் 'வலுவாக மீண்டெழுதல்' கலந்துரையாடல்

சிங்கப்பூரர்கள் பரிவுமிக்கவர்கள் என்பதைக் காட்டும் 'வலுவாக மீண்டெழுதல்' கலந்துரையாடல்

2 mins read
0ccb5cea-febc-48c2-a479-9c8bbd31da5e
(இடமிருந்து) கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வு அதிகாரியும் துணை இயக்குநருமான (ஆய்வு) டாக்டர் கிலியன் கோ, பிஎஸ்ஏ இன்டர்நேஷனல் குழுமத்தின் தலைமை நிர்வாகி டான் சோங் மெங், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, தேசிய தொண்டூழியம், கொடையாளர் நிலையத்தின் தலைமை நிர்வாகி மெலிசா குவீ ஆகியோர் வட்டமேசை கலந்துரையாடலில் பங்கேற்றனர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் சிங்கப்பூர் பிரிவு ஆசிரியர் ஸாக்கிர் ஹுசேன் (வலக்கோடி) கலந்துரையாடலை வழிநடத்தினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'வலு­வாக மீண்­டெ­ழு­தல்' கலந்­து­ரை­யா­டல்­களில் பேசப்­பட்ட பல்­வேறு கருப்­பொ­ருள்­களில் முக்­கிய விவ­கா­ரங்­களில் ஒன்­றாக சமூகத்தில் அனைவரையும் ஈடுபடுத்துதல் உரு­வெ­டுத்­துள்­ள­தா­க­வும் சிங்­கப்­பூ­ரர்­கள் பரி­வு­மிக்­க­வர்­கள் என்­பதை இது காட்­டு­வதா­க­வும் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா தெரி­வித்­துள்­ளார்.

கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சு­ட­னான பங்­கா­ளித்­துவ முயற்­சி­யில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் ஏற்­பாடு செய்த 'ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் செயற்­கூட்­டணி' வட்­ட­மேசை கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொண்டு பேசி­ய­போது அவர் இத­னைக் கூறி­னார்.

"இந்­தக் கலந்­து­ரை­யா­டல்­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பற்றி எடுத்­து­ரைக்­கின்­றன. அதா­வது நாம் பரிவு­மிக்­க­வர்­கள், குறை­பா­டு­க­ளைப் பற்றி எடுத்­துச் சொல்­வ­தற்கு தயங்கு­வ­தில்லை, மற்­ற­வர்­க­ளுக்கு உதவ விரும்­புதல், சிறந்த ஓர் இடத்தை நிர்­மா­ணிக்க விரும்­பு­வது உள்­ளிட்­டவை இவற்­றில் அடங்­கும்," என்று அமைச்­சர் இந்­தி­ராணி விவ­ரித்­தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்­கப்­பட்ட இந்­தக் கலந்­து­ரை­யா­டல் தொடர், கொவிட்-19 சூழ­லில் இருந்து மீண்­டெ­ழும் சிங்­கப்­பூ­ருக்­கான பாதையை வகுக்க முற்­ப­டு­கிறது.

கலந்­து­ரை­யா­டல் தொடங்கப்பட்ட ஒன்­பது மாதங்­களில் 17,000க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் அவர்­க­ளது யோச­னை­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் பகிர்ந்­து­கொண்­டுள்­ள­னர்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீயு­டன் சேர்ந்து அமைச்­சர் இந்­தி­ராணி இந்­தக் கலந்­து­ரை­யா­டல்­களை வழி­ந­டத்து­கி­றார்.

இந்­தக் கலந்­து­ரை­யா­டல் தொடர் வெளிக்­கொ­ணர்ந்­துள்ள விஷ­யங்­களில் ஒன்று பங்­கா­ளித்­துவ உற­வு­முறை, அல்­லது செயற்­கூட்­டணி எனப்படுவது.

"இந்­தக் கலந்­து­ரை­யா­டல்­களில் ஏரா­ள­மான சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் நாங்­கள் பேசி யோச­னை­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­டோம். அதன் பிறகு அவற்­றைச் செயல்­ப­டுத்த யாரா­வது முன்­வர வேண்­டும்.

"எனவே வெவ்­வேறு துறை­களில் உள்­ள­வர்­கள் இவை தொடர்­பி­லான உத்­தி­க­ளைப் பற்றி யோசித்து அவற்றை அர­சாங்­கத்­து­டன் சேர்ந்து செயல்­ப­டுத்த விரும்­பி­னோம்," என்று அமைச்­சர் கூறி­னார்.

கொவிட்-19 சூழலில் இந்தப் பங்காளித்துவ உறவுமுறை உருவெடுத்திருப்பதை நேற்றைய வட்டமேசை கலந்துரையாடலில் பங்கேற்பாளர்கள் சுட்டினர்.