தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'தூடோங்' விவகாரத்தில் அரசின் போக்கு: மூத்த முஸ்லிம் தலைவர்கள் வரவேற்பு

2 mins read
e7ee34c0-ecb2-4171-abfe-b85e26dc8bec
-

முஸ்­லிம் தாதி­கள் தங்­கள் பணி­யின்­போது 'தூடோங்' எனும் தலை­யங்கி அணி­வதை அனு­ம­திப்­ப­தில் அர­சாங்­கம் எடுத்­தி­ருக்­கும் ஆக்­க­பூர்­வ­மான போக்கை மூத்த முஸ்­லிம் தலை­வர்­கள் வர­வேற்­றுள்­ள­னர்.

இதன் தொடர்­பில் அர­சாங்­கம் பல­முறை மூத்த முஸ்­லிம் தலை­வர்­க­ளு­டன் தனிப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யுள்­ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்­தில் நடந்த அந்­தக் கலந்­து­ரை­யாடல்­களில் அங்­கம் வகித்த முஸ்­லிம் தலை­வர்­கள், தனிப்­பட்ட கலந்து­ரை­யா­டல்­க­ளுக்கு மரி­யாதை கொடுக்­கும் வகை­யில் அது தொடர்­பான வெளிப்­ப­டை­யான கருத்­து­ரைப்­பில் தாங்­கள் ஈடு­ப­ட­வில்லை என்று கூறி­னர்.

அவர்­களில் ஒரு­வ­ரான உஸ்­தாஸ் ஹஸ்பி ஹசான், "தலை­யங்கி தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­கள், அசா­டிஸா எனும் முஸ்­லிம் சமய ஆசி­ரி­யர்­கள், சிங்­கப்­பூர் இஸ்­லாமிய கல்­வி­மான்­கள் ஆகி­யோ­ரி­டையே நடத்­தப்­பட்­டன. ஆனால் அது தொடர்­பான விவ­ரங்­களை நாங்­கள் வெளிப்­ப­டை­யா­கத் தெரி­விக்­க­வில்லை.

"தனிப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­கள் தொடர்­பில் அர­சாங்­கம் எத்­தகைய போக்கை எடுக்­கிறது என்று எங்­க­ளுக்­குத் தெரி­யாது. ஆக அதன் தொடர்­பி­லான உறு­தி­யான முடிவு தெரி­யா­த­போது நாங்­களும் அது பற்­றிக் கருத்­து­ரைப்­பது சரி­ஆகாது.

"இன்று அமைச்­சர் அது பற்றி வெளிப்­ப­டை­யா­கப் பேசி­விட்­டார். இனி நாங்­கள் இது­பற்றி முஸ்­லிம் சமூ­கத்­தி­ன­ரி­டம் பேச­லாம்," என்­றும் திரு ஹஸ்பி விவ­ரித்­தார்.

நேற்று கதிஜா பள்­ளி­வா­ச­லில் மூத்த முஸ்­லிம் தலை­வர்­கள் கலந்து­கொண்ட கலந்­து­ரை­யா­ட­லுக்­குப் பிறகு உஸ்­தாஸ் ஹஸ்பி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

அந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம், உள்­துறை துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம் ஆகி­யோ­ரும் பங்­கேற்­றனர்.

'பெர்­காஸ்' எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய கல்­வி­மான்­கள் மற்­றும் சமய ஆசி­ரி­யர்­கள் சங்­கத்­தின் தலை­வ­ரு­மான உஸ்­தாஸ் ஹஸ்­பி­யு­டன் அதே சங்­கத்­தின் மூத்த தலை­வர்­கள் உஸ்­தாஸ் அலி முகம்­மது, உஸ்­தாஸ் பசுனி மௌலான் ஆகி­யோர், "ஆறு மாதங்­க­ளுக்கு முன்பே அமைச்­சர் சண்­மு­கம், தாதி­கள் தங்­கள் பணி­யின்­போது தலை­யங்கி அணி­வதை அனு­ம­திக்­கும் போக்கை எடுக்க அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது என்று கூறி­யி­ருந்­தார்," என்­றுரைத்தனர்.

"சிங்­கப்­பூ­ரில் சட்ட, ஒழுங்­கைக் கட்­டிக்­காக்க அர­சாங்­கம் எடுத்து வரும் முயற்­சி­க­ளுக்­கும் நாட்­டில் வெவ்­வேறு இனங்­க­ளுக்­கும் சம­யங்­க­ளுக்­கும் இடையே அமை­தி­யும் நல்­லி­ணக்­க­மும் வலுப்­பட அது வகுத்­து­வ­ரும் கொள்­கை­க­ளுக்­கும் முஸ்­லிம் சமூ­கம் தனது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கிறது.

"நமது வெவ்­வேறு தேவை­களுக்­கும் நடை­மு­றை­க­ளுக்­கும் மதிப்­பளித்து நாம் கூறும் கருத்­து­க­ளைச் செவி­ம­டுக்­கும் அர­சாங்­கத்­தின் நிலைப்­பாட்­டுக்கு நன்றி கூறக் கடமைப்­பட்­டுள்­ளோம்.

"நமது கருத்­து­களை அரசு கவ­ன­மா­கக் கேட்டு காலத்­துக்கு ஏற்­றாற்­போல கொள்­கை­க­ளி­லும் மாற்­றங்­க­ளைக் கொண்டு வரு­கிறது," என்­றும் உஸ்­தாஸ் அலி தெரி­வித்­தார்.

"குடி­மக்­கள் என்ற முறை­யில் அனை­வ­ரை­யும் ஒன்­றா­கப் பார்க்­கும் நாட்­டின் கொள்­கை­க­ளுக்கு நாம் மதிப்­ப­ளித்து அவற்றை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும்.

"வேற்­று­மை­க­ளைக் களைந்து அவற்றை ஒற்­றுமை உணர்­வு­டன் நாம் ஏற்­றுக்­கொண்­டால், சிங்­கப்­பூர் தொடர்ந்து கட்­டிக்­காத்து வரும் அமை­தி­யும் நல்­லி­ணக்­க­மும் நீண்ட காலத்­துக்கு நீடித்து நிலைக்­கும்," என்­றும் உஸ்­தாஸ் அலி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.