கேப்பிட்டலேண்ட் பங்குகள் நேற்று வர்த்தகம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே 21 விழுக்காடு வரை ஏற்றம்கண்டன.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த நிறுவனத்தின் பங்குப் பரிவர்த்தனை 3.31 வெள்ளியில் முடி வடைந்தது.
திங்கட்கிழமை நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் நிறுத்தி வைக்கப் பட்டது.
மறுநாளான நேற்று வர்த்தகம் தொடங்கியதும் 10.02 மணியளவில் கேப்பிட்டலேண்ட் பங்கு களின் விலை 3.80 வெள்ளிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது.
இது, ஏறக்குறைய 14.8 விழுக்காடு அதாவது 49 காசு உயர்வாகும்.
சுமார் 46.5 மில்லியன் பங்குகள் அப்போது கைமாறின.
சென்ற திங்கட்கிழமை பெரிய அளவில் சீர்திருத்தத்தை கேப்பிட்டலேண்ட் அறிவித்ததைத் தொடர்ந்து பங்கு விலைகள் அதி கரித்தன.
சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக கேப்பிட்டலேண்ட் குழுமம் இரண்டு நிறுவனங்களாக பிரிக்கப்படும். சொத்து மேம்பாட்டு நிறுவனம், தனியார் உரிமையாளரின் கீழ் வரும்.
முதலீட்டு நிறுவனமும் தங்குமிட நிறுவனமும் ஒரே நிறுவனமாக இணைக்கப்பட்டு கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் மேனஜ்மெண்ட் (சிஎல்ஐஎம்) என்று அழைக்கப்படும்.
கேப்பிட்டலேண்ட் பங்குதாரர்கள், சிஎல்ஐஎம்மின் பங்குதாரர்களாக ஆவார்கள்.
இந்த நிறுவனம் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

