ஊழியர் நலனில் அக்கறை செலுத்துவது, நீக்குப்போக்கான வேலை நேரம், செயல்பாடுகளை செம்மையாக்க தொழில்நுட்பங் களைப் புகுத்துவது போன்ற நல்ல நடைமுறைகளை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பின்பற்றுவது அடுத்த கொள்ளைநோய்க்கு தயார்ப்படுத்தும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கையை கொவிட்-19 தலை கீழாகப் புரட்டிப்போட்டு உள்ள நிலையில் நிதி நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்களை ஆராய 'எதிர்கால வேலையிடங்கள்' எனும் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதற்கு சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் ஆதரவு அளித்திருந்தன.
கொள்ளைநோய் மீண்டும் ஏற்பட்டால் தயாராக இருப்பது எப்படி என்பதற்கு வழிகாட்டும் விதமாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டதாக வங்கிகள் சங்கம் தெரி வித்தது.

