மின்சார கார்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப் போவதாக பிரபல ஹோங் லியோங் நிதி நிறுவனம் அறிவித்துள்ளது.
மின்சார கார்களை வாங்கு பவர்களை ஈர்க்க கடந்த மாதம் டிபிஎஸ் வங்கியும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் வாடகை கார்களுக்கான கடன் வட்டி விகிதம் 1.5 விழுக்காடாக இருக்கும் என்று ஹோங் லியோங் தெரிவித்தது. இது, சிங்கப்பூரிலேயே ஆகக் குறைவான வட்டி விகிதம் என கூறப்படுகிறது.
முழுமையான மின்சார கார் களுக்கும் 'ஹைபிரிட்' எனக் குறிப்பிடப்படும் பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார் களுக்கும் 1.5 விழுக்காடு வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும் என்று ஹோங் லியோங் குறிப்பிட்டது. சொந்தமாக மின்னூட்ட நிலையங்களை அமைக்க விரும்பும் வாடகை நிறுவனங் களுக்கும் கடன் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. "வாகன வாடகை நிறு வனங்களை இலக்காகக் கொண்டுள்ளோம்," என்று ஹோங் லியோங் ஃபைனான்ஸ் தலைவர் ஆங் டாங் சோர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் தனியார் வாடகை கார் நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 142 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளன. 2020 நிலவரப்படி 71,147 கார்களை தனி யார் வாடகை நிறுவனங்கள் வைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

