லஞ்சமாக $472,000 வரை பெற்றதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்
கலைக்கழகத்தின் (எஸ்எம்யு) முன்னாள் துணை இயக்குநர் ஒருவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டள்ளது.
கிறிஸ்டஃபர் டான் டோ இங்கீ, 43, (படம்) என்னும் அவர் பல்
கலைக்கழகத்தில் மூவருக்குச் சாதகமான வர்த்தக அனுகூலங் களைச் செய்து தர 2017 ஆகஸ்ட்டுக்கும் 2019 நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 50 குற்றச்சாட்டுகளை இவர் எதிர்நோக்குகிறார். இவருக்கு லஞ்சப் பணம் கொடுத்ததாக மூவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
இண்டர்நேஷனல் அலையன்ஸ் மார்க்கெட்டிங் என்னும் நிறுவனத்தின் இயக்குநர் கென்னத் லம் சியன் லூங், சிஜே சினர்ஜி நிறு
வனத்தின் இயக்குநர் செர் கெங் தான், அசெட்டுவலைஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் ஜெஃப்ரி லாங் சீ கின் ஆகியோர் அம்மூவர். லஞ்சம் பெற முன்வந்த 35 குற்றச்சாட்டுகளை லம் எதிர்நோக்குகிறார்.
இதேபோன்ற எட்டு குற்றச்சாட்டுகளை லாங்கும் ஏழு குற்றச்சாட்டுகளை செர்ரும் எதிர்நோக்குகின்றனர். இவை தவிர, லஞ்ச ஊழல் புலன் விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் பொய்த் தகவலை தந்த ஒரு குற்றச்சாட்டை டானும் செர்ரும் எதிர்நோக்குகின்றனர்.
விசாரணை நடைபெற்றபோது, தம்மிடம் கடனாக வாங்கிய பணத்தை செர் தம்மிடம் கொடுத்ததாக டான் கூறினார். அது உண்மைக்கு மாறான தகவல் என்று பின்னர் தெரிய வந்தது.
மேலும், பணம் வாங்கியது மற்றும் வாங்க இருப்பது ஆகியன தொடர்பில் மூவரும் அனுப்பிய தகவலை தம் கைபேசியிலிருந்து டான் அழித்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
நால்வரும் வழக்கு விசாரணைக்காக ஏப்ரல் 20ஆம் தேதி மீண்டும் நீதிமன்றம் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனை, $100,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம். லஞ்சக் குற்றம் தொடர்பில் பொய்த் தகவல் தருவோருக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

