'அன்டர்வாட்டர் வோர்ல்டு'க்கு அபராதம்

'அன்டர்வாட்டர் வோர்ல்டு'க்கு அபராதம்

2 mins read
72b09851-0acf-4ff4-b6d5-bb069c9a622a
ஒரு வகையான திருக்கை மீன் விஷத்தன்மை கொண்ட வாலால் தாக்கியதன் காரணமாக 2016ஆம் ஆண்டு உயிரிழந்த சான் கம் வெங். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாது­காப்பு நடை­மு­றை­களில் இருந்த குறை­பா­டு­கள் காரண மாக அதன் முக்­கு­ளிப்­பா­ளர் ஒரு­வ­ரான திரு சான் கம் வெங் என்­ப­வர், 2016ல் மர­ண­முற்­ற­தன் தொடர்­பில் முன்பு செந்­தோ­சா­வில் செயல்­பட்ட 'அன்­டர்­வாட்­டர் வோர்ல்டு சிங்­கப்­பூர்' எனும் நீர்­வாழ் உயி­ரின காட்­சி­ய­கத்­துக்கு $105,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்­புக் குறை­பா­டு­களில் ஒன்­றாக, முக்­கு­ளிப்பு செயல்­பா­டு­க­ளின்­போது அவ­ச­ர­நிலை ஏற்­பட்­டால், மீட்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் போதிய அள­வுக்கு திட்­ட­மி­டப்­ப­ட­வில்லை என்று கூறப்­பட்­டது.

மேலும் முக்­கு­ளிப்­பா­ளர்­க­ளின் சாத­னங்­களில் பாது­காப்பு அம்­சங்­கள் சோதிக்­கப்­பட்­ட­தற்கு முறை யான குறிப்­பு­கள் வைத்­தி­ருக்­க­வும் அந்த அக்­காட்­சி­ய­கம் தவ­றி­விட்­ட­தாக புல­னாய்­வா­ளர்­கள் கூறி­னர்.

ஹாவ் பார் லெய்­ஷர் நிறு­வ­னத்­தின் கீழ் இயங்­கிய 'அன்­டர் வாட்­டர் வோல்ர்டு சிங்­கப்­பூர்' 2016 ஜூன் மாதம் தனது செயல்­பாட்டை நிறுத்­திக்­கொண்­டது. அது வேலை­ யி­டப் பாது­காப்பு மற்­றும் சுகா­தா­ரச் சட்­டத்­தின்­கீழ் குற்­ற­மி­ழைத்­துள்­ளது என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

இருப்­பி­னும், பாது­காப்­புக் குறை­பா­டு­க­ளால் திரு சான் மர­ண­மடை­ய­வில்லை என்று நீதி­மன்­றம் கூறி­யது. அந்த 62 வயது ஆட­வர் அந்­தக் காட்­சி­ய­கத்­தில் 25 ஆண்­டு­க­ளாக வேலை செய்­தி­ருக்­கி­றார். அந்­தக் காட்­சி­ய­கம் திறக்­கப்­ப­டுவ தற்கு முன்­பும் அது மூடப்­பட்ட பிற­கும் கடல்­வாழ் உயி­ரி­னங்களைப் பிடிப்­ப­தற்கு திட்­ட­மி­டும் பணி திரு சானுக்கு அளிக்­கப்­பட்­டது.

அதன் தொடர்­பின் 2016 அக்­டோ­பர் 4ஆம் தேதி பிற்­ப­கல் 2.30 மணிக்கு திரு சானும் அவ­ரது சகாக்­களும் சிறுத்தை திருக்கை மீனைப் பிடிக்க முய­ன்றபோது, விஷத்­தன்மை கொண்ட தனது வாலால் அது திரு சானின் நெஞ்­சில் ஆழ­மா­கக் குத்­தி­யது. சிங்­கப்­பூர் பொது மருத்­துவமனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அவர் அன்று பிற்­ப­கல் 3.30 மணிக்கு உயிர்நீத்­தார். இச்சம்­ப­வத்­துக்­குப் பிறகு நடத்­தப்­பட்ட விசாரணையில், கடல்­வாழ் உயி­ரி­னங்­க­ளைப் பிடிப்பதற்கான பாது­காப்பு ஏற்­பா­டு­கள் தொடர்­பான முறை­யான குறிப்­பு­களை அந்­தக் காட்­சி­ய­கம் வைத்­தி­ருக்­க­வில்லை என தெரியவந்தது.