மேலும் 15 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி; அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்

மேலும் 15 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி; அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்

2 mins read
0c17daf2-c739-4ab8-af06-eb97fb776614
-

சிங்­கப்­பூ­ரில் புதி­தாக 15 பேர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது. இதை­ய­டுத்து, மொத்த பாதிப்பு 60,236ஆக உயர்ந்­தது.

புதி­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அனை­வ­ரும் வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­கள். சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தும் இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு, அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

சமூ­கத்­தி­லும் வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­க­ளி­லும் புதி­தாக எவ­ரை­யும் கொரோனா தொற்­ற­வில்லை.

முன்­ன­தாக, நேற்று முன்­தி­னம் கொரோனா பாதிப்பு உறு­தி­செய்­யப்­பட்ட 13 பேரில் 40 வயது சிங்­கப்­பூர் பெண்­ணும் ஒரு­வர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இருந்து இம்­மா­தம் 2ஆம் தேதி­யன்று அவர் சிங்­கப்­பூர் திரும்­பி­னார். விமான நிலை­யத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட கொவிட்-19 பரி­சோ­த­னை­யில் அவ­ருக்­குத் தொற்று இல்லை எனத் தெரி­ய­வந்­தது.

இல்­லத் தனி­மைக் காலத்­தின் இறு­திக்­கட்­டத்­தில் மீண்­டும் செய்­யப்­பட்ட பரி­சோ­த­னை­யில் அவர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டு இ­ருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அதைத் தொடர்ந்து, அவர் தேசிய தொற்­று­நோய்த் தடுப்பு நிலை­யத்­திற்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

அவ­ரி­டம் கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­குறி ஏதும் தென்­ப­ட­வில்லை. ­அவர் 2019 ஆகஸ்ட் முதல் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வசித்து வந்­தார்.

கிரு­மித்­தொற்று கண்­டுள்­ள­தாக நேற்று முன்­தி­னம் உறுதி செய்­யப்­பட்­ட­வர்­களில் மேலும் இரண்டு சிங்­கப்­பூ­ரர்­களும் இரண்டு நிரந்­த­ர­வா­சி­களும் அடங்­கு­வர். அவர்­கள் இந்­தியா, மலே­சியா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் திரும்­பி­னர்.

மற்­ற­வர்­களில் ஒரு­வர் சார்ந்­தி­ருப்­போர் அட்­டை­யில் இருக்­கும் இந்­தி­யர்; ஒரு­வர் அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த வேலை அனு­மதி அட்­டை­தா­ரர்; ஐவர் பங்­ளா­தேஷ், இந்­தியா, பிலிப்­பீன்­சைச் சேர்ந்த வேலை அனு­ம­திச்­சீட்டு ஊழி­யர்­கள்; இன்­னொ­ரு­வர் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ரசு­களில் இருந்து குறு­கிய கால விசா­வில் வந்­த­வர்.

வேலை அனு­ம­திச்­சீட்டு ஊழி­யர்­கள் ஐவ­ரில் ஒரு­வர் இல்­லப் பணிப்­பெண் என்­றும் அவர்­கள் ஐவ­ரி­ட­மும் கொரோனா தொற்­றுக்­கான அறி­குறி ஏதும் காணப்­ப­ட­வில்லை என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, இது­வரை 60,048 பேர் கொரோனா தொற்­றி­லி­ருந்து மீண்­டு­விட்­ட­னர். சிங்­கப்­பூரில் கொரோனா தொற்று கார­ண­மாக 30 பேரும் தொற்று கண்­ட­வர்­களில் 15 பேர் வேறு உடல்­ந­லக் கோளா­று­க­ளா­லும் இறந்து­விட்­ட­னர்.