தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: நீதிமன்றம் வராத ஆடவர் கைது

2 mins read
866c631a-90d5-4671-aa86-f2fa5cf9f59a
-

பாலி­யல் பலாத்­கா­ரத்­திற்கு 15 வயது சிறு­மியை உட்­ப­டுத்­தி­ய­தாக குற்­றம் சாட்­டப்­பட்ட 21 வயது ஆட­வர், திங்­கட்­கி­ழ­மை­ நீதி­மன்­றம்­வரவில்லை. அதை­ய­டுத்து ஆட­வரை போலி­சார் நேற்று முன்­தி­னம் பென்­கூ­ல­னில் உள்ள ஸ்ட்­ராண்ட் ஹோட்­ட­லில் கைது செய்­த­னர்.

ஆட­வர் திங்­கட்­கி­ழ­மை­ நீதி­மன்­றத்­தில் காலை 10 மணிக்கு முன்­னி­லை­யாக வேண்­டியிருந்தது.

தன் தந்­தை­யு­ட­னும் வழக்­க­றி­ஞரு­ட­னும் காலைச் சிற்­றுண்டி சாப்­பிட்­டுக்­கொண்­டி­ருந்த ஆட­வர், வயிற்­று­வலி என்று கூறி 9.10 மணி­ய­ள­வில் கழி­வ­றைக்­குச் சென்­று­விட்­டார். அதை­ய­டுத்து அவ­ரைக் காண­வில்லை. தொலை­பேசி, குறுந்­த­க­வல் மூலம் அவ­ரைத் தொடர்­பு­கொள்­ள­வும் முடி­ய­வில்லை.

அதே நாளில் ஆட­வ­ரின் பெய­ரில் உயர் நீதி­மன்­றம் கைதாணை பிறப்­பித்­தது.

ஆட­வர் மீது கூடு­தல் குற்­றச்சாட்டுகள் சுமத்துவது ­தொடர்­பில் விசா­ரணை மேற்­கொண்­டி­ருப்­ப­தாக போலி­சார் நேற்று தெரி­வித்­தனர்.

ஆட­வ­ருக்கு அடைக்­க­லம் தந்­த­தா­கக் கூறப்­படும் இன்­னொரு 21 வயது ஆட­வரை போலி­சார் தடுத்து வைத்­துள்­ள­னர்.

சிறு­மியை பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­த­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள ஆட­வர் 18 வய­தாக இருந்­த­போது, பாசிர் ரிஸ் ஸ்தி­ரீட் 51ன் வீவக கீழ்த்­த­ளத்­தில் 2017ஆம் ஆண்டு அக்­டோ­பர் 17ஆம் தேதி­யன்று குற்­றம் புரிந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தன் நண்­பர்­க­ளு­டன் 'ட்ருத் ஆர் டேர்' விளை­யா­டிய அந்த 15 வயது சிறுமி, நடக்க முடி­யாத அள­வுக்கு மது போதை­யில் இருந்­தார்.

பின் நண்­பர் கூட்­டம் சென்ற பிறகு, குற்­றம் சாட்­டப்­பட்ட ஆட­வர், இன்­னொரு ஆட­வ­ரு­டன் சேர்ந்து சிறு­மியை போதை­யிலிருந்து எழுப்ப முயன்­ற­தா­க­வும் சிறுமி மயக்­க­நி­லை­யில் இருந்­ததை இருவரும் அறிந்து பாலி­யல் ரீதி­யாக அவ­ரைத் துன்­பு­றுத்­தி­ய­தா­க­வும் கூறப்­படு­கிறது.

சிறு­மி­யைச் சீர­ழித்­த­தாக ஏற்­கெ­னவே ஆட­வ­ரு­டன் குற்­றம் சாட்­டப்­பட்ட மற்­றோர் ஆட­வர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.

சிறு­மி­யின் அடை­யா­ளத்­தைக் காக்க, வழக்­கில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ரின் பெயர்­கள் வெளி­யிடப்­ப­ட­வில்லை.

பிணை நிபந்­த­னை­களை மீறி நீதி­மன்­றத்­திற்கு வராத ஆட­வர், தப்­பி­யோ­டும் சாத்­தி­யம் அதி­கம் இருப்­ப­தால் இம்­முறை பிணை வழங்க வேண்­டாம் என்று அரசாங்­கத் தரப்­பி­னர் நீதி­மன்­றத்­தில் கேட்டுக்­கொண்­ட­னர்.

ஆட­வர் மீண்­டும் தடுத்து வைக்­கப்­ப­டு­வ­தற்கு முன், அவ­ரின் தந்தை­யு­டன் 15 நிமி­டங்­கள் பேச அனு­மதி வழங்­கப்­பட்­டது.

முதல் முறை ஆட­வர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­போது, அவ­ரின் தந்தை தந்த $30,000 பிணைத்­தொகை பறி­மு­தல் செய்­யப்­ப­டுமா என்­பது குறித்­துத் தக­வல் இல்லை.