அரசாங்கம் மீது நம்பிக்கை; அரசியலில் ஆர்வமின்மை

அரசாங்கம் மீது நம்பிக்கை; அரசியலில் ஆர்வமின்மை

3 mins read
717d0a0c-a1ec-4683-aa39-5eba1e1907a0
-

சிங்கப்பூரர்களின் மனநிலை தொடர்பில் கொள்கை ஆய்வுக் கழகத்தின் கண்டுபிடிப்புகள்

அர­சாங்­கத்­தின் மீது சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அதி­க­ளவு நம்­பிக்கை உள்­ளது. ஆனால், அவர்­க­ளி­டத்­தில் அர­சி­யல் ஆர்­வம் இல்லை என்று கொள்கை ஆய்­வுக் கழ­கம் (ஐபி­எஸ்) கண்­ட­றிந்­துள்­ளது.

அமைப்­பு­கள் மீதும் அரசு மீதும் சிங்­கப்­பூ­ரர்­கள் கொண்­டுள்ள நம்­பிக்கை அதி­கம் என்­றா­லும் இளம் வய­தி­னர் மற்­றும் சிங்­கப்­பூ­ரில் பிறந்­த­வர்­க­ளுக்கு இதே உணர்வு இல்லை என்று கூறப்­பட்­டது.

அமைப்­பு­கள், அர­சி­யல், கொள்­கை­கள் தொடர்­பில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் மனப்­போக்கை ஆய்­வா­ளர்­கள் ஆராய்ந்­த­தில், மூன்­றில் இரு­வ­ருக்கு அர­சி­யல் விவ­காரங்­களில் ஆர்­வம் இல்லை என்று தெரி­ய­வந்­தது. கொள்கை ஆய்­வுக் கழ­கம் நேற்று அதன் ஆய்வு முடி­வு­களை அறி­வித்­தது.

பொது இடங்­களில் அரசு கண்­கா­ணிப்பு இருப்­பதை ஆத­ரித்த சிங்­கப்­பூ­ரர்­கள், அதே கண்­கா­ணிப்பு தனிப்­பட்ட சூழல்­க­ளிலோ தங்­க­ளுக்­குத் தெரி­விக்­கா­மலோ நடை­பெ­றக்­கூ­டாது என்­ற­னர்.

மக்­க­ளி­டையே நில­வும் நம்­பிக்­கை­கள், 80 நாடு­களில் சமூக-அர­சி­யல் ரீதி­யாக காலப்­போக்­கில் ஏற்­படும் தாக்­கம் ஆகி­ய­வற்­றைக் கண்­கா­ணிக்­கும் 'வோர்ல்ட் வேலி­யூஸ் சர்வே' என்ற அனைத்­து­லக ஆய்­வுத் திட்­டத்­தின் ஓர் அங்­கமே 'ஐபி­எஸ் சோஷல் லேப்' மேற்­கொண்­டுள்ள இந்த ஆய்­வா­கும்.

ஆய்­வா­ளர்­கள் நவம்­பர் 2019க்கும் மார்ச் 2020க்கும் இடைப்­பட்ட காலத்­தில் 2,012 சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­க­ளு­டன் நேர்­மு­கப் பேட்டி நடத்­தி­னர்.

சிங்­கப்­பூர் அமைப்­பு­கள் மீது பொது­மக்­கள் நம்­பிக்கை, அர­சி­யல் தொடர்­பான மனப்­போக்கு, அரசு கண்­கா­ணிப்பு தொடர்­பான மனப்­போக்கு, குடி­நு­ழைவு தொடர்­பான மனப்­போக்கு ஆகிய நான்கு அம்­சங்­களில் ஆய்வு கவ­னம் செலுத்­தி­யது. கழகத்தின் கண்­டு­பி­டிப்­பு­கள்:

அமைப்­பு­கள் மீது அதி­க­ளவு நம்­பிக்கை

அர­சாங்­கம், நாடா­ளு­மன்­றம், நீதி­மன்­றங்­கள், சிங்­கப்­பூர் காவல் படை, சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, அர­சாங்­கத் துறை ஆகி­ய­வற்­றின் மீது சிங்­கப்­பூ­ரர்­கள் ஆக அதிக நம்­பிக்கை கொண்­டுள்­ள­தாக ஆய்வு தெரி­வித்­துள்­ளது. அனைத்து அமைப்­பு­கள் மீதும் பெரு­ம­ளவு நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­தாக குறைந்­தது 70 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

நாட்­டில் ஊழல் குறை­வாக இருப்­ப­தாக 62.1 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

அர­சாங்­கம் மீது அதிக நம்­பிக்கை

அர­சாங்­கம் மீது நம்­பிக்கை இருப்­ப­தாக கிட்­டத்­தட்ட 81.5 விழுக்­காட்­டி­னர் ஆய்­வில் தெரி­வித்­தி­ருந்­த­னர். இதை ஒப்­பி­டு­கை­யில் சீன அர­சாங்­கம் மீது நம்­பிக்கை உள்­ள­தாக அந்­நாட்­டின் 94.9 விழுக்­காட்­டி­னர் கூறி­யி­ருந்­த­னர்.

இளம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் சிங்­கப்­பூரி­லேயே பிறந்­த­வர்­க­ளுக்­கும் அதிக நம்­பிக்கை இல்லை என்று கண்­ட­றி­யப்­பட்­டது. அர­சாங்­கம் மீது நம்­பிக்கை இல்லை என்று சிங்­கப்­பூ­ரில் பிறந்த 20.2 விழுக்­காட்­டி­னர் ஆய்­வில் கூறி­யி­ருந்­த­னர்.

அர­சி­ய­லில் ஆர்­வ­மில்லை

அர­சி­யல் விவ­கா­ரங்­களில் ஆர்­வம் இருப்­ப­தாக 37.2 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே ஆய்­வில் தெரி­வித்­த­னர். ஆர்­வம் இருந்­த­வர்­கள் பெரும்­பா­லும் ஆண்­க­ளாக இருந்­த­னர்; கூடு­தல் கல்­வித் தகு­தி­களும் சம்­ப­ள­மும் பெற்­றி­ருந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரில் மனித உரி­மைக்கு மதிப்­பளிக்­கப்­ப­டு­வ­தாக ஆய்­வில் 87.6 விழுக்­காட்­டி­னர் கூறி­யி­ருந்­த­னர்.

தனிப்­பட்ட சூழல்­களில் அர­சாங்­கக் கண்­கா­ணிப்பு வேண்­டாம்

பொது இடங்­களில் அர­சாங்­கம் மக்­களைக் கண்­கா­ணிப்­ப­தற்கு உரிமை உண்டு என்று மூன்­றில் இரு­வர் தெரி­வித்­த­னர். ஆனால் ஒரு­வ­ரின் இணைய நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­கா­ணிக்க அர­சுக்கு உரிமை உண்டு என்று கிட்­டத்­தட்ட 25 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே கூறி­னர்.

அர­சாங்­கக் கண்­கா­ணிப்பு இருப்­பது தொடர்­பில் மூத்த சிங்­கப்­பூ­ரர்­கள் கூடு­தல் வர­வேற்பு அளிப்­ப­தா­க­வும் ஆய்வு கண்­ட­றிந்­தது.