தடுப்பூசி போட்டுக்கொள்ள கல்வித்துறையினர் ஆர்வம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள கல்வித்துறையினர் ஆர்வம்

2 mins read
6b6895cf-56da-4f74-b362-0964251ac04d
அத்தியாவசிய மற்றும் முன்கள சேவைகளை வழங்கு வோருக்குத் தேசிய தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஆசிரியர் களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டி இருக்கிறது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

50,000 பேருக்குக் கடிதம்; 100 பேருக்கு 80 பேர் ஊசிக்கு நாள், நேரம் ஒதுக்கினர்

கொவிட்-19 தடுப்­பூசி கடி­தம் அனுப்­பப்­பட்ட கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­களில் 80%க்கும் அதி­க­மா­னோர் ஊசி போட்­டுக்­கொள்ள பதிந்­து­கொண்டுள்­ள­னர்.

கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் இதனை அறி­வித்­தார். முதல் கட்­ட­மாக ஏறக்­கு­றைய 50,000 கடி­தங்­கள் மார்ச்­சில் அவர்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டன. சமூ­கத் தொற்­றைச் தவிர்க்­கும் வகை­யில் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளும்­படி கல்­வித் துறை­யி­ன­ருக்கு ஊக்­க­மூட்­டப்­பட்­டது.

தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தற்­கான ஆத­ரவு கல்­வித் துறை­யில் மிக­வும் ஆக்­க­க­ர­மாக இருக்­கிறது என்று திரு வோங் தெரி­வித்­தார். ஊழி­யர்­களில் சிலர் ஏற்­கெ­னவே முதல் ஊசி­யைப் போட்­டுக்­கொண்டு இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

தங்­களை மட்­டு­மின்றி மாண­வர்­க­ளை­யும் சமூ­கத்­தை­யும் பாது­காத்­துக்­கொள்ள அவர்­கள் முன்­வந்து இருப்­பது மிக­வும் மகிழ்ச்­சி­யாக உள்­ளது என்று அமைச்­சர் நேற்று ஃபேஸ்புக்­கில் குறிப்­பிட்­டார்.

அத்­தி­யா­வ­சிய முன்­கள சேவை­களில் ஈடு­பட்டு இருப்­போ­ருக்­குத் தடுப்­பூ­சித் திட்­டத்­தை சிங்­கப்­பூர் நீட்­டித்து இருக்­கிறது. அத­னை­யொட்டி ஆசி­ரி­யர்­க­ளுக்கு இந்த வாய்ப்பு கிட்டி உள்­ளது.

150,000 பேருக்­கும் மேற்­பட்ட ஆசி­ரி­யர்­கள், ஊழியர்­க­ளுக்­குத் தடுப்­பூசி வாய்ப்பு கிடைக்­கும் என்று கல்வி அமைச்சு இந்த மாதத் தொடக்­கத்­தில் அறி­வித்தது.

தொடக்­கப்­பள்ளி, உயர்­நிலைப்பள்ளி, தொடக்­கக்கல்­லூரி, மில்­லேனியா கல்வி நிலை­யம், சிறப்புக் கல்­விப் பள்­ளி­கள், தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம் ஆகியவற்­றில் பணி­யாற்றுவோர் இவர்­களில் அடங்கு­வர். குறிப்­பிட்ட பாலர்பள்ளி­ ஊழி­யர்­க­ளுக்­கும் தனி­யார் பள்ளி ஊழி­யர்­களுக்­கும் இந்த வாய்ப்பு கிடைக்­கும்.

கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் இரண்டு தலை­வர்­களில் ஒரு­வ­ரான திரு வோங், ஊசி போட்­டுக்கொண்ட கல்­வித்­ து­றை­யி­னர் சில­ரின் அனு­ப­வத்­தை­யும் ஃபேஸ்புக்­கில் பகிர்ந்­து­கொண்­டார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட கிராஞ்சி உயர்­நி­லைப்பள்ளி ஆசி­ரி­ய­ரான டான் ஃபோங் வெய், உடலில் ஊசி போட்டுக் கொண்ட இடம் கொஞ்ச நேரத்­திற்கு மரத்­துப்போன­தைப் போல் இருந்­த­தா­க­வும் மற்­ற­படி வேறுபாடு எது­வும் இல்லை என்­றும் கூறி­னார்.

அதே­போல், மெரி­டி­யன் தொடக்கப்பள்ளி­யைச் சேர்ந்த ஒரு துறையின் தலை­வ­ரான ஹான் ஸி ரூய், தன் இரண்டு பிள்­ளை­களை­யும் தன் பொறுப்­பில் இருக்­கும் மாண­வர்­க­ளை­யும் மற்­ற­வர்­க­ளை­யும் பாது­காக்க வேண்­டும் என்ற உணர்வு கார­ண­மாக தான் ஊசி போட்­டுக்­கொள்ள முடிவு செய்­த­தா­கக் கூறி­னார்.