புதிதாக 17 பேருக்குத் தொற்று

புதிதாக 17 பேருக்குத் தொற்று

1 mins read
4202a6fe-2942-4c0d-9bd5-5652e07a90cf
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 17 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­கள் அனை­வருமே வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். எல்­லா­ருக்­கும் தனிமை­யில் இருக்­கும்­படி உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

புதி­தாக கிருமி தொற்­றி­யோரை­யும் சேர்த்து கொவிட்-19 தொற்றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை 60,253 ஆகி­யது.

புதன்­கி­ழ­மை­யன்று புதி­தாக 15 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­னது. அவர்­களில் சிங்­கப்­பூ­ரர்­களும் வேலை அனு­ம­தி­உள்ளவர்களும் அடங்­கு­வர்.

இந்­தோ­னீ­சியா, பிரிட்­டன், பங்­ளா­தேஷ், இந்­தியா, மலே­சியா ஆகிய நாடு­களில் இருந்து அவர்­கள் இங்கு வந்­த­வர்­கள்.

அந்த 15 பேரில், 14 பேருக்கு கிருமி தொற்­றிய அறி­குறி எது­வும் வெளியே தெரி­ய­வில்லை.

ஒரு­வ­ருக்கு மட்­டும் அறி­குறி தெரிந்­தது. அனை­வ­ரும் தடுத்து வைக்­கப்­பட்டு பரி­சோ­திக்­கப்­பட்­ட­னர். சிங்­கப்­பூ­ரில் கடந்த வாரத்­தில் சமூ­கத்­தொற்று யாருக்­கும் இல்­லாத நிலை ஏற்­பட்­ட­தாக அமைச்சு தெரி­வித்­தது.

புதன்­கி­ழமை 15 பேர் குண­மடைந்­த­னர். அவர்­க­ளை­யும் சேர்த்து 60,063 பேர் முற்­றி­லும் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள்.

இன்­ன­மும் 25 பேர் மருத்­து­வ­மனை­களில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். யாரும் தீவிர கண்­கா­ணிப்­பில் இல்லை. 103 பேர் நல்­வாழ்வு நிலை­யங்­களில் குண­மடைந்து வரு­கி­றார்­கள். தொற்று கார­ண­மாக மொத்­தம் 30 பேர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­னர்.