'சிஐஎம்பி சிங்கப்பூர்' ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள அதன் கிளையை மூடுவதுடன் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளது. வர்த்தக மறுஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இது இடம்பெறுவதாக தி பிசினஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிசினஸ் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ள வங்கியின் உள்சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பில், "முன்னணி ஆசிய வங்கியாகத் திகழும் குழுமத்தின் இலக்கிற்கு ஏற்ப, நிலையான வளர்ச்சியை வலியுறுத்தும் பொருட்டு வங்கி அதன் உத்தியை மறுஆய்வு செய்திருப்பதைத் தொடர்ந்து இது இடம்பெறுவதாக" 'சிஐஎம்பி சிங்கப்பூரி'ன் தலைமை நிர்வாகி விக்டர் லீ குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

