தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுபானக் கூடங்களுக்கு நிதியுதவி

2 mins read
665e39ab-7c53-482d-9381-0601b27c4bd9
தனிநபர் நடத்தும் மதுபானக் கூடங்கள் மட்டுமே ஒரு மாத வாடகை நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று மதுபானக் கூடங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. படம்: எஸ்சிபிஏ -

கொள்­ளை­நோ­யால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்ள மது­பா­னக் கூடங்­க­ளுக்கு உதவ இரண்டு புதிய நிதித் திட்டங்கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்கு 142,500 வெள்ளி வரை­யில் திரட்­டப்­பட்­டுள்­ள­தாக சிங்­கப்­பூர் மது­பா­னக் கூடங்­க­ள் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

வாடகை நிதி­யு­த­விக்கு 75,000 வெள்ளி திரட்­டப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் தகுதி பெற்ற மது­பா­னக் கூடங்­க­ளுக்கு ஒரு மாத வாட­கைச் செலவு வழங்­கப்­படும்.

சந்­தை­மய ஆத­ரவு நிதிக்கு மேலும் 67,500 ெவள்ளி திரட்­டப்­பட்­டுள்­ளது. மது­பா­னக் கூடங்­க­ளின் சந்­தை­மய முயற்­சிக்கு உறுப்­பி­னர்­க­ளுக்கு தலா ஆயி­ரம் வெள்ளி வழங்­கப்­படும்.

நேற்று வெளி­யி­டப்­பட்ட சங்­கத்­தின் அறிக்கையில் இந்த விவ­ரங்­ க­ள் இருந்தன.

இரண்டு நிதி­யு­த­விக்­கும் இப்­போது விண்­ணப்­பிக்­க­லாம் என அறிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.

வர்த்­தக நிறு­வ­னங்­கள் அளித்த ஆத­ரவு மூலம் நிதி திரட்­டப்­பட்­டுள்­ளது. 'Steer' எனும் எஸ்ஜி ஒன்­றி­ணைந்த இயக்­கத்­தின் தொழில்­நி­று­வன மீள்­தி­றன் மேம்­பாட்­டுத் திட்­டத்­தின் கீழ் எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் திரட்­டப்­பட்ட தொகை­யில் 50 விழுக்­காட்டை ஈடு செய்­துள்­ளது.

கொள்­ளை­நோய் பாதிப்­பி­லி­ருந்து வர்த்­த­கங்­கள் மீண்டு வரு­வ­தற்­கும் பொரு­ளி­யல் மீட்­சிக்கு தங்­களை ஆயத்தப்­ப­டுத்­திக்கொள்­ள­வும் நிதி­யு­தவி கைகொ­டுக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வாடகை ஒப்பந்தத்தில் குறிப் பிடப்பட்டுள்ள ஒரு மாத வாடகை, 20,000க்கும் மேற்படாமல் வாடகை நிதியுதவி வழங்கப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பன்னிரண்டு மாதங்களுக்கு மேல் செயல்படும் மதுபானக் கூடங்களுக்கு நிதியுதவி வழங்கு வதில் முன்னுரிமை வழங்கப்படும். அப்படி 12 மாதங்களுக்கு மேல் செயல்படும் மதுபானக் கூடங்கள், முந்தைய ஆண்டைவிட தற்போது இரண்டாம் கட்டத் தளர்வில் வரு மானத்தில் 35 விழுக்காடு இழப்பு ஏற்பட்டதை நிரூபிக்க வேண்டும்.

சந்தைமய ஆதரவுக்கான நிதிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை விண்ணப் பங்களை சமர்ப்பிக்கலாம் என சங்கம் தெரிவித்தது.