எஸ்பிஎஸ் பேருந்து ஓட்டுநரை கத்தியைக் காட்டி மிரட்டியது உண்மைதான் என்று நீதிமன்ற வழக்கில் ஆடவர் ஒருவர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
முகக்கவசத்தை முறையாக அணிய ஓட்டுநர் வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்த கான் வீ இயோவ் கத்தியைக் காட்டி ஓட்டுநரை மிரட்டியுள்ளார்.
திரு கான் மீது ஆபத்தான ஆயுதங்களை அனுமதியின்றி வைத்திருத்தல், வேண்டுமென்றே காயம் விளைவித்தல் உட்பட ஆறு குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆறு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பின்னர் ஒரு தேதியில் கானுக்குத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் மீதான இதர ஏழு குற்றச்சாட்டுகளையும் நீதிபதி கவனத்தில் கொள்வார் என எதிர்பார்க் கப்படுகிறது.
எஸ்பிஎஸ் பேருந்து ஒட்டுநரை மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஒரு மாத காலத்தில் பலரை கான் மிரட்டியதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சென்ற ஜூலை 27ல் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் கோெஜக் ஓட்டு நருடன் அவர் பிரச்சினையில் ஈடுபட்டார்.
முழு டாக்சி கட்டணத்தையும் அவரால் செலுத்த முடியவில்லை. அப்போது சுத்தியைக் காட்டி அவர் மிரட்டியுள்ளார். காரின் நடுப்பகுதியை அவர் சேதப்படுத்தினார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு உட்லண்ட்சின் தற்காலிக பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியை சுத்தியலைக் காட்டி மிரட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி எஸ்பிஎஸ் பேருந்து ஓட்டுநர் தொடர் பிலான சம்பவம் நடைபெற்றது.
முகக்கவசத்தை கீழே இழுத்துவிட்டு கைபேசியில் கான் பேசிக் கொண்டிருந்தார்.
இதனைக் கவனித்த ஓட்டுநர் முகக்கவசத்தை சரியாக அணியும்படி கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் சாடினார்.
பின்னர் கத்தியைக் காட்டி ஓட்டு நரை அவர் மிரட்டினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஈசூன் எம்ஆர்டி நிலையத்தில் கானை அடையாளம் கண்டுபிடித்து போலிசார் கைது செய்தனர். அவரிட மிருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

