பிரதமர் லீ சியன் லூங்கும்
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் இவ்வாண்டில் நேரடியாகச் சந்தித்துப் பேச உள்ளனர். தலைவர்கள் ஓய்வுத்தள சந்திப்பாக அது அமையும். பெரும்பாலும் பிந்தான் விடுமுறை தீவில் இவ்விரு தலைவர்களின் சந்திப்பு நிகழும் சாத்தியம் உள்ளது.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பால
கிருஷ்ணனும் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடியும் ஜகார்த்தாவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இத்தகவலைத் தெரிவித்தனர்.
கொவிட்-19 கொள்ளை
நோயின் பிடியிலிருந்து விடு
படுவதற்கான வழிகளை கண்டறிவது தொடர்பாகவும் இரு நாட்டுத் தலைவர்களின் வருடாந்திர சந்திப்புக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் தாங்கள் ஆலோசித்ததாக இரு வரும் அப்போது கூறினர்.
இந்த வருடாந்திர சந்திப்பு சிங்கப்பூர்-இந்தோனீசிய இரு
தரப்பு உறவுகளின் உத்திபூர்வ அவசியத்தை உணர்த்துவதோடு முக்கிய அம்சங்களில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகளை ஆரா யும் தளமாகவும் அமையும் என்று திருவாட்டி ரெட்னோ கூறினார்.

