கட்டுமானத் துறைக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான நிவாரணம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு

கட்டுமானத் துறைக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான நிவாரணம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு

2 mins read
8293caee-1ea1-45b5-b08f-a0edd0ccaecd
-

கட்­டட, விநி­யோக ஒப்­பந்­தங்­கள் தொடர்­பில் கட்­டு­மான நிறு­வ­னங்­களுக்கு மேலும் ஆறு மாத காலத்­திற்கு சட்ட, அம­லாக்க நட­வ­டிக்­கை­களில் இருந்து தளர்வு அளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இடர்­த­ணிப்­புக் காலத்தை இவ்­வாண்டு செப்­டம்­பர் 30ஆம் தேதி வரை நீட்­டிக்க அனு­ம­திக்­கும் வகை­யில் சட்­டத்­தி­ருத்­தங்­கள் முன்­வைக்­கப்­படும் என தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

நடப்பிலுள்ள இடர்­த­ணிப்­புக் காலம் இம்­மா­தத்­து­டன் முடிவடைய இருக்கிறது.

அடுத்த மாதம் 5ஆம் தேதி நாடா­ளு­மன்­றம் மீண்­டும் கூடும்­போது கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) (சட்­டத்­தி­ருத்­தம் 2) மசோதா 2021 தாக்­கல் செய்­யப்­படும் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

"இடர்­த­ணிப்­புக் காலத்­தில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­கள் தங்­க­ளுக்கு இடை­யி­லான வேறு­பா­டு­களை இணக்­க­மான முறை­யி­லும் இரு­தரப்­பிற்­கும் பல­ன­ளிக்­கும் விதத்­தி­லும் பேசித் தீர்த்­துக்­கொள்­ளும்­படி ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­றன," என்று அமைச்சு கூறி­யுள்­ளது.

அம்­ம­சோதா நிறை­வேற்­றப்­பட்­டால், வாங்­கு­வ­தற்­கான விருப்­புரிமை, விற்­றல்-வாங்­கு­தல் உடன்­பா­டு­கள் ஆகி­ய­வற்­றுக்­கான இடர்­தணிப்­புக் காலம் மேலும் மூன்று மாதங்­க­ளுக்கு, அதா­வது ஜூன் 30ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­படும்.

"குடி­யி­ருப்பு, வர்த்­தக, தொழில்­சார் சொத்­து­களை வாங்­கு­வோ­ரி­டத்­தில், பணம் செலுத்த கூடு­தல் காலம் தேவைப்­ப­டு­வோ­ருக்கு இந்த நீட்­டிப்பு கைகொ­டுக்­கும்," என்று அமைச்சு தெரி­வித்­தது.

சொத்து மேம்­பாட்­டா­ளர்­களும் வாங்­கு­வோ­ரும் தங்­க­ளது ஒப்­பந்­தக் கடப்­பா­டு­களை நிறை­வேற்ற முடி­யா­மல் போகு­மெ­னில், பேச்­சு­வார்த்தை மூலம் இணக்­கத் தீர்வை எட்ட ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

சொத்­துச் சந்தை, சுற்­றுப்­புற சேவை­கள், பாது­கா­வல் போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய மனி­த­னால் உரு­வாக்­கப்­பட்ட சுற்­றுச்­சூ­ழல் தொழில்­துறை கொரோனா நெருக்­கடி­யால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கட்­டு­மா­னப் பணி­கள் மீண்­டும் தொடங்­கி­விட்­ட­போதும் அத்­து­றை­யின் எதிர்­கா­லம் குறித்து நிச்­ச­ய­மற்ற நிலை நீடிப்­ப­தா­க­வும் நிறு­வ­னங்­க­ளுக்­கான சவால்­கள் தொடர்­வ­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வரத்து தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக ஊதி­யம் போன்ற ஊழி­யர் தொடர்­பான செல­வு­களும் அதி­கரித்­து­விட்­டதை அமைச்சு ஒத்­துக்­கொண்­டது.

பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களுக்கு இணங்க வேண்­டி­யி­ருப்­ப­தால் குறை­வான ஊழி­யர்­க­ளு­டன் செயல்­படும் நிலைக்­கும் நிறு­வ­னங்­கள் தள்­ளப்­பட்­டன.

$1.36 பில்­லி­யன் மதிப்­பி­லான கட்­டு­மா­னத் துறை ஆத­ர­வுத் தொகுப்பு, மனி­த­வள ஆத­ரவு, சட்­ட­ரீ­தி­யாக நிவா­ர­ணம் எனப் பல வழி­க­ளி­லும் ஆத­ரவு வழங்கி வரும் அர­சாங்­கம், அது மேலும் தொட­ரும் எனத் தெரி­வித்­துள்­ளது.