அலுவலகங்களில் அதிகம் பேர்: ஆயத்தமாகும் அரசாங்கத் துறை

அலுவலகங்களில் அதிகம் பேர்: ஆயத்தமாகும் அரசாங்கத் துறை

2 mins read
0967243a-dcc9-436c-b4c4-0149a7e187fb
-

சிங்­கப்­பூ­ரில் வீட்­டில் இருந்து வேலை பார்க்­கும் நடை­முறை அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் மாற்­றம் காண்­கிறது. வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­கக்­கூ­டிய அர­சாங்க ஊழி­யர்­கள், பொது­வான வழி­காட்டி நெறி­மு­றை­யின்படி, வாரம் ஐந்து நாட்­களில் மூன்று நாட்­கள் அலு­வ­ல­கத்­திற்­குச் சென்று வேலை பார்க்க ஊக்­கு­விக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்று கட்­டுக்­குள் வரு­வ­தால் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் அடுத்த மாதம் தளர்த்­தப்­படும் என்று சென்ற வாரம் சிறப்­புப் பணிக்­குழு அறி­வித்­தது.

இந்த நிலை­யில் ஏப்­ரல் 5க்கு பிறகு வாரம் இரு நாட்களுக்­கும் அதிக நாட்­கள் வீட்­டி­லேயே இருந்து வேலை பார்க்க அனு­மதி கிடைத்­தால் அரசு அதி­கா­ரி­கள் அவ்­வாறே செய்­ய­லாம் என்று அர­சாங்­கத் தேர்­வா­ணை­யம் தெரி­வித்­த­தாக சண்டே டைம்ஸ் குறிப்­பிட்­டது.

பல அரசு அதி­கா­ரி­க­ளைப் பொறுத்தவரை பிரிந்து குழுக்­க­ளாக வேலை பார்க்­கும் ஏற்­பா­டு­களும் இனி கட்­டா­ய­மில்லை.

உச்­ச­நே­ரங்­களில் பொதுப் போக்கு­வ­ரத்­தில் பய­ணத்­தைக் குறைத்­துக் கொள்­ளும் வகை­யில், மாற்று வேலை நேரத்தை நிர்­ணயித்­துக் கொள்­ள­லாம் என்­றும் நேரடி­யா­க­வும் இணை­யம் மூல­மா­க­வும் வேலைபார்க்­கும் ஏற்­பாட்டை கடைப்­பி­டிக்­க­லாம் என்­றும் முதலாளி களுக்கு ஊக்­க­மூட்­டப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் 16 அமைச்­சு­களிலும் 50க்கும் மேற்­பட்ட வாரி­யங்­க­ளி­லும் ஏறத்­தாழ 153,000 அதி­கா­ரி­கள் வேலை பார்க்­கி­றார்­கள்.

இத­னி­டையே, மேலும் பல ஊழி­யர்­கள் வேலை இடத்­திற்­குத் திரும்பு­வதை தனி­யார் துறை வர வேற்­ப­தாக சிங்­கப்­பூர் தொழில்­துறை சம்­மே­ள­ன­மும் சிறிய, நடுத்­தர நிறு வ­னங்­கள் சங்­க­மும் தெரி­வித்­தன.

இருந்­தா­லும் அலு­வ­ல­கத்­திற்கு ஊழி­யர்­கள் திரும்­பு­வார்­கள் என்று எதிர்­பார்த்து இருக்­கும் நிறு­வ­னங்­களுக்குச் சில இடை­யூ­று­களும் இருக்­கும் என்று தெரி­கிறது.

சண்டே டைம்ஸ் 2,600 பேரை உள்­ள­டக்கி ஓர் ஆய்வு நடத்­தி­யது.

பகு­தி­நேர அடிப்­ப­டை­யில் கூட வேலை­யி­டத்­துக்­குத் திரும்ப விரும்­ப­வில்லை என்று நான்கு ஊழி­யர்­களில் மூன்று பேர் தெரி­வித்­த­தாக அந்த ஆய்வு கூறு­கிறது.

இத­னி­டையே, தேவைப்­பட்­டால் நிறு­வ­னத்­தின் மனி­த­வள கொள்­கை­க­ளை­யொட்டி ஊழி­யர்­கள் அலு­வ­ல­கத்­துக்குத் திரும்ப வேண்­டும் என்று சிங்­கப்­பூர் மனி­த­வ­ளப் பயி­ல­கத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ஆல்­வின் கோ கூறு­கி­றார்.

இவ்­வே­ளை­யில், அதி­கம் பேர் வேலைக்­குத் திரும்­பு­வார்­கள் என்­பதால் உடல்­நிலை சரி­யில்­லா­த­வர்­கள் பொதுப் போக்­கு­வ­ரத்தை தவிர்த்து­விட வேண்­டும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் பயணி­க­ளுக்கு ஆலோ­சனை கூறியது.

பேசு­வ­தை­யும் பய­ணி­கள் தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்திய இந்த ஆணை­யம், வேலை நேரத்தை மாற்றி அமைத்­துக்­கொள்­ளும்­படி முத­லா­ளி­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

இருந்­தா­லும் இத்­த­கைய ஏற்­பாடு குறிப்­பி­டத்­தக்க பலனை ஏற்­ப­டுத்­தும் வாய்ப்பு இல்லை என்று போக்கு ­வ­ரத்து பொரு­ளி­யல் வல்­லு­நர் வால்­டர் தெசிரா கூறு­கி­றார்.