தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகத் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் செம்பவாங் பகுதியில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டன

2 mins read
5317fc25-a8e0-42dd-80aa-d4cf4e030e5c
அமைச்சர் ஓங் யி காங், தொண்டூழியர்களுடன் சேர்ந்து 'பெனாகா பிளேஸ்' என்ற இடத்தில் உள்ள சமூகத் தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்து சேகரிக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செம்­ப­வாங் குழுத்­தொ­கு­தி­யின் 'காய்கறி தோட்ட விளைச்­சல் செயல்­திட்­டத்­தின்­' கீழ், அந்­தப் பகு­தி­யில் வசிக்­கும் வசதி குறைந்­தோ­ருக்கு இரண்­டாம் கட்­ட­மாக நேற்று காய்­க­றி­கள் அறு­வடை செய்து விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

இத்­திட்­டம் பிப்­ர­வரி 28ல் முதன்­மு­றை­யா­கத் தொடங்­கப்­பட்­டது.

செம்­ப­வாங்கில் பரந்து அமைந்­துள்ள 23 சமூ­கத் தோட்­டங்­களில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் மாறி மாறி காய்­ க­றி­க­ளைப் பயி­ரி­டு­வார்­கள்.

மத்­திய செம்­ப­வாங் குடி­யி­ருப்­பா­ளர்­கள் கட்­ட­மைப்­புச் சமூ­கத் தோட்­டத்தில் நேற்று காய்­க­றி­கள் பறிக்­கப்­பட்­டன.

ஏறத்­தாழ 20 பேர் காய்­க­றி­களைச் செடி­க­ளி­லி­ருந்து பறித்து சேக­ரித்­த­னர்.

செம்­ப­வாங் மத்­திய பகு­தியைப் பிர­தி­நி­திக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங், காய்­கறி அறு­வடை­யில் பங்­கெ­டுத்­துக்­கொண்­டார். ஏறத்­தாழ 60 கிலோ காய்­கறி­கள் பறிக்­கப்­பட்­டன.

"கம்­போங்­கில் வசித்த அனு­ப­வத்­து­டன்­கூ­டிய குடியிருப்பாளர்கள், அப்பகு­தி­யின் முன்­னாள் எம்பியும் அமைச்­ச­ரு­மான கோ பூன் வான் வழி­காட்­ட­லின் கீழ், தோட்­டங்­களை அமைத்து காய்­க­றி­க­ளைப் பயி­ரி­டத் தொடங்­கி­னர்.

"அத்­த­கைய தோட்­டங்­களில் விளை­விக்­கப்­படும் காய்­க­றி­களை வரு­வாய் குறைந்த குடும்­பங்களுக்கு கொடுத்து உத­வ­லாம் என்­ப­தால் நான் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பொறுப்­பெ­டுத்­துக் கொண்­ட­தும் அந்த யோச­னை­யைத் தொடர முடிவு செய்­தேன்.

''செம்­ப­வாங் தொடர்ந்து மேம்­பட்டு வரு­கிறது. மேலும் கான்­கி­ரீட் கட்­ட­டங்­கள் எழும்­ப­வி­ருக்­கின்­றன. அதே நேரத்­தில் அங்கு கம்­போங் உணர்­வும் தொட­ரும் என்­பது மிக அரு­மை­யான ஒன்­றாக உள்ளது," என்று அமைச்சர் கூறி­னார்.

காய்­க­றி­க­ளைச் சேகரித்த தொண்­டூ­ழி­யர்­கள், இரு வாடகை புளோக்­கு­க­ளுக்­குச் சென்று அவற்­றில் குடி­யி­ருக்­கும் சுமார் 30 குடும்­பங்­க­ளுக்குக் காய்­கறி­க­ளுடன் முட்டை, ரொட்டி, மளி­கைப் பொருட்­ க­ளை­யும் கொடுத்­தார்­கள்.