மின்னிலக்கத் திறன் வழங்கும் திட்டங்களுக்கான நிதி $7.6 மி.

மின்னிலக்கத் திறன் வழங்கும் திட்டங்களுக்கான நிதி $7.6 மி.

2 mins read
ba0d4960-e441-453f-9fc6-9ae7ea63f695
ஐஎம்டிஏ பங்காளிகள் பாராட்டு நிகழ்வில் அதிபர் ஹலிமா யாக்கோப், தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன். படம்: சாவ் பாவ் -

சிங்­கப்­பூ­ரர்­கள் மின்­னி­லக்­கத் திறன்­க­ளைப் பெற­வும் அது­தொ­டர்­பான இடை­வெ­ளியை நிரப்­ப­வும் வகுக்­கப்­பட்­டுள்ள அடித்­த­ளத் திட்­டங்­க­ளுக்­குத் தேவைப்­படும் வளங்­களை ஏற்­ப­டுத்த $7.6 மில்­லி­யன் நிதி சேர்ந்­துள்­ளது.

புதி­தா­கத் தொடங்­கப்­பட்ட தேசிய இயக்­கம் மூலம் நன்­கொ­டை­களும் வெள்­ளிக்கு வெள்ளி என்ற அடிப்­ப­டை­யி­லான அர­சாங்க உத­வி­யும் திரண்­ட­தன் மூலம் இந்த நிதி உதவி வளர்ந்­துள்­ளது.

'டிஜிட்­டல் ஃபார் லைஃப்' என்­னும் வாழ்க்­கைக்­கான மின்­னி­லக்க இயக்­கத்தை கடந்த மாதம் அதி­பர் ஹலிமா யாக்­கோப் தொடங்­கி­வைத்­தார். அதன் புர­வ­லர் அவர்­தான். மின்­னி­லக்­கத் தேவைக்­கான நிதி சேர்ப்­புத் திட்­டத்­தை­யும் அப்­போது அவர் தொடங்­கி­னார். அதற்­கான முதல் நிதி­யாக அதி­பர் சவால் அற­நிதி மூலம் திரண்ட $2.5 மில்­லி­யன் வழங்­கப்­பட்­டது.

இத­னு­டன் ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் வங்­கி­யும் கெப்­பல் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­ன­மும் $1.3 மில்­லி­யன் நன்­கொடை அளித்­த­தைத் தொடர்ந்து நிதி­யின் மொத்தத் தொகை $3.8 மில்­லி­ய­னாக உயர்ந்­தது.

வெள்­ளிக்கு வெள்ளி என்­னும் அர­சாங்­கக் கைகொ­டுப்பு நட­வ­டி­ககை மூலம் அத்­தொகை இரட்­டிப்­பாகி $7.6 மில்­லி­யன் ஆக அதி­க­ரித்து உள்­ளது. சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்­றில் தொடர்பு தக­வல் அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் நேற்று இதனை அறி­வித்­தார்.

சமூ­கம் வழி­ந­டத்­தும் திட்­டங்­களை ஆத­ரிக்­க­வும் மின்­னி­லக்­கத்­தில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்கி அவர்­க­ளுக்குத் திறன்­களை ஊட்­ட­வும் தேவைப்­படும் யோச­னை­களை இவ்­வாண்­டின் இரண்­டாம் காலாண்­டில் இயக்­கம் வகுக்­கும் என்று அப்­போது திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

ஐஎம்­டிஏ எனப்­படும் தக­வல்­

தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் ஏற்­ப­டுத்தி உள்ள நிதி சேர்ப்பு நட­வ­டிக்கை தற்­போது திரண்­டுள்ள நிதியை அடுத்த மூன்­றாண்­டு­களில் $10 மில்­லி­ய­னாக உயர்த்த இலக்கு வகுத்­துள்­ளது.

கொவிட்-19 சூழல் மின்­னி­லக்­க­ம­யத்­துக்­கான தேவையை வேகப்­ப­டுத்­தி­ய­து­டன் அது­பற்றி அறி­யா­தோர் பின்­தங்­கும் நிலை ஏற்­படும் என்­னும் அச்­சு­றுத்­த­லை­யும் ஏற்­ப­டுத்­தி­யது.

அத்­த­கைய நிலை­யில், நாட்­டின் மின்­னி­லக்க மீள்­தி­றனை வலுப்­ப­டுத்த உத­வ­வும் மின்­னி­லக்க ஆபத்­து­க­ளைக் கண்­ட­றிய அல்­லது குறைக்க பொது­மக்­க­ளுக்கு உத­வ­வும் வாழ்க்­கைக்­கான மின்­னி­லக்க இயக்­கம் தொடங்­கப்­பட்­டது.

அதற்கு டிரை­ஜென், எஞ்­ஜி­னி­ய­ரிங் குட், கூகல் ஆகிய மூன்று பெரிய அமைப்­பு­கள் தொடர்ந்து ஆத­ரவு வழங்கி வரு­கின்­றன.

குழந்­தை­கள், பெரி­ய­வர்­கள் மற்­றும் மூத்­தோர் என அனைத்­துப் பிரி­வி­ன­ரும் மின்­னி­லக்­கத் திறன்­

க­ளை­யும் அறி­வாற்­ற­லை­யும் பெறும் வகை­யில் இம்­மூன்று அமைப்­பு­களும் தங்­க­ளது முயற்­சி­களை விரி­வு­ப­டுத்த உள்­ளன.