டெலிகிராமில் மீண்டும் ஆபாசப் பட பிரச்சினை

டெலிகிராமில் மீண்டும் ஆபாசப் பட பிரச்சினை

3 mins read
890a9488-31e8-47d7-9730-0c70345ba3c5
-

முடக்­கப்­பட்­டுள்ள எஸ்ஜி நாசி லெமாக் உரை­யா­டல் குழு­வைப் போல சிங்­கப்­பூ­ரில் உள்ள பெண்­

க­ளின் ஆபா­சப் படங்­கள், காணொ­ளி­களை இணை­யத்­தில் பகிர்ந்­து­கொள்­ளும் வேறு உரை­யா­டல் குழுக்­கள் மீண்­டும் டெலி­கி­ராம் எனப்­படும் தக­வல் அனுப்­பும் செய­லி­யில் செயல்­ப­டத் தொடங்­கி­யுள்­ளன.

எம்­ஆர்டி ரயில்­களில் பய­ணம் செய்­யும் பெண்­க­ளின் படங்­கள், பெண்­க­ளின் செல்ஃபி படங்­கள், சீருடை அணிந்த உயர்­நி­லைப்­பள்ளி மற்­றும் தொடக்­கக் கல்­லூரி மாண­வி­க­ளின் டிக்­டாக் காணொ­ளி­கள் ஆகி­ய­வற்றை இந்த உரை­யா­டல் குழுக்­கள் பகிர்ந்து வரு­கின்­றன. பாதிப்­ப­டைந்த பெண்­க­ளின் பய­னா­ளர் பெயர்­கள் திரை­யில் காட்­டப்­ப­டு­கின்­றன.

இத்­த­கைய ஆபா­சப் படங்­கள், காணொ­ளி­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும் 10க்கும் மேற்­பட்ட உரை­யா­டல் குழுக்­களில் பெரும்­பா­லா­ன­வற்­றுக்கு ஏறத்­தாழ 2,000 உறுப்­பி­னர்­கள் இருப்­பதை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் கண்­டு­பி­டித்­துள்­ளது.

சில உரை­யா­டல் குழுக்­க­ளுக்கு 7,000க்கும் மேற்­பட்ட சந்­தா­தா­ரர்­கள் உள்­ள­னர். இந்த உரை­யா­டல் குழுக்­கள் 500க்கும் மேற்­பட்ட படங்­கள், காணொ­ளிப் பதி­வு­க­ளைப் பகிர்ந்­துள்­ளன.

இந்த உரை­யா­டல் குழுக்­க­ளுக்கு எதி­ராக போலி­சில் புகார் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த விவ­கா­ரம் குறித்து போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய உரை­யா­டல் குழுக்­க­ளைப் பற்றி டுவிட்­டர் மூலம் தமக்கு தெரி­ய­வந்­த­தா­க­வும் அவற்­றுக்கு எதி­ராக இம்­மா­தம் 24ஆம் தேதி­யன்று போலி­சில் புகார் செய்­த­தா­க­வும் சிங்­கப்­பூர் தேசிய பல்­

க­லைக்­க­ழ­கத்­தின் (என்­யு­எஸ்) அரசியல் அறிவியல் துறை பட்­டக்­கல்வி மாண­வி­யான 21 வயது குமாரி நிஷா ராய் கூறி­னார்.

குமாரி நிஷா ராய் என்­யு­எஸ் வளா­கத்தை மேலும் பாது­காப்­பா­ன­தாக்க செயல்­படும் 'ஸ்டு­டண்ட்ஸ் ஃபார் எ சேஃபர் என்­யு­எஸ்' அமைப்­பின் உறுப்­பி­ன­ரா­வார்.

சிங்­கப்­பூர் பெண்­க­ளின் ஆபா­சப் படங்­கள், காணொ­ளி­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும் உரை­யா­டல் குழுக்­கள் டெலி­கி­ராம் தளத்­தில் மீண்­டு­ம் செயல்­ப­டத் தொடங்­கி­யி­ருப்­பதை மாண­வர்­க­ளுக்கு தெரி­விக்­கும் வகை­யில் இந்த அமைப்பு நேற்று முன்­தி­னம் சமூக ஊட­கத்­தில் பதி­விட்­டது.

பெண்­க­ளின் ஆபா­சப் படங்­கள், காணொ­ளி­க­ளைப் பகிர்ந்­து­வ­ரும் கிட்­டத்­தட்ட 60 உரை­யா­டல் குழுக்­களை 20 பேரு­டன் சேர்ந்து குமாரி நிஷா ராய் அடை­யா­ளம் காட்­டி­யுள்­ளார். பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்கு இவர்­கள் ஆத­ர­வுக் கரம் நீட்­டி­யுள்­ள­னர். இது­வரை 30 பெண்­க­ளு­டன் இவர்­கள் தொடர்­பு­கொண்­டுள்­ள­னர்.

"மிக­வும் அரு­வ­ருப்­பாக இருக்­கிறது. பெரி­ய­வர்­கள், வயது குறை­வா­னோர் ஆகி­யோ­ரின் ஆபா­சப் படங்­கள் பகிர்ந்­து­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய படங்­கள், காணொ­ளி­கள் சமூக ஊட­கங்­களில் வலம் வரு­வ­தைப் பாரக்­கும்­போது மன­திற்கு வேத­னை­யாக உள்­ளது. தங்­க­ளு­டைய படங்­கள் வலம் வரு­வது பற்றி சில பெண்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. சிலர் உதவி நாடத் தயங்­கி­னர்," என்­றார் குமாரி நிஷா ராய். இத்­த­கைய உரை­யா­டல் குழுக்­களை முடக்க பொது மனு ஒன்றை அவர் தயா­ரித்து வரு­கி­றார். நேற்­றைய நில­வ­ரப்­படி அதில் 1,500க்கும் மேற்­பட்­டோர் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்

இதற்­கி­டையே, இந்த உரை­யா­டல் குழுக்­களை அடை­யா­ளம் காண இணை­யப் பாது­காப்பு நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­யும் 21 வயது குமாரி நாஸ்­நீன் அஷ்­ஃபுர் உதவி வரு­கி­றார். இதற்­காக அவர் சில இர­வு­களில் பின்­னி­ரவு 3 மணி வரை வேலை செய்­கி­றார்.

"இந்த உரை­யா­டல் குழுக்­க­ளால் பகிர்ந்­து­கொள்­ளப்­பட்ட படங்­களில் நான்­கூட இருந்­தி­ருக்­க­லாம். அது­பற்றி நினைக்­கும்­போது பயம் என்னை ஆட்­கொண்­டது. எனது நண்­பர்­கள், குடும்ப உறுப்­பி­னர்­கள் ஆகி­யோ­ரின் படங்­க­ளா­கக்­கூட இருந்­தி­ருக்­க­லாம். எஸ்ஜி நாசி லெமாக் உரை­யா­டல் குழு முடக்­கப்­பட்­ட­போது இத்­த­கைய தரக்­

கு­றை­வான செய­லில் ஈடு­பட எண்­ணு­ப­வர்­க­ளுக்கு அது பயத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும் என்று நினைத்­தேன். அது தவறு என்று இப்­போது உணர்­கி­றேன்," என்­றார் குமாரி நாஸ்­நீன் அஷ்­ஃபுர்.

ஆபாசப் படங்களைப் பகிர்ந்துகொண்டதற்காக 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எஸ்ஜி நாசி லெமாக் உரையாடல் குழுவைச் சேர்ந்த நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.