$27.7 மில்லியன் கொடுத்து உதவ சிங்கப்பூர் திட்டம்

$27.7 மில்லியன் கொடுத்து உதவ சிங்கப்பூர் திட்டம்

2 mins read
ebd7c491-1d37-4ed4-b54f-58e07a6cab70
-

கொவிட்-19 நெருக்­கடி கார­ண­மாக பொரு­ளி­யல் சரி­வைச் சந்­தித்த வசதி குறை­வான நாடு­க­ளுக்கு உதவ அனைத்­து­லக முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

அதில் சிங்­கப்­பூ­ரும் இணைந்து US$20.57 மில்­லி­யன் (S$27.69 மில்­லி­யன்) உதவ முன்­வந்­துள்­ளது.

அனைத்­து­லக பண நிதி­யம் (ஐஎம்­எஃப்) மூலம் இந்த உத­வித்­தொகை வழங்­கப்­படும்.

இருப்­பி­னும் இதற்கு ஏப்­ரல் 5ஆம் தேதி கூட இருக்­கும் நாடாளு­ மன்­றத்­தின் ஒப்­பு­த­லைப் பெற­வேண்டி இருப்­ப­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நேற்று தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

மூன்று நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆத­ரவு வழங்க சிங்­கப்­பூர் முடிவு செய்­துள்­ளது.

ஐஎம்­எ­ஃப்­பின் பேர­ழிவு முறி­ய­டிப்பு மற்­றும் நிவா­ரண அற­நிதி, கொவிட்-19 நெருக்­கடி சமா­ளிப்­புத் திறன் நட­வ­டிக்கை மற்­றும் கடும் கடன் பிரச்­சி­னை­யில் சிக்­கித் தவிக்­கும் ஏழை நாடு­க­ளின் வளர்ச்­சிக்­கும் ஏழ்மை தணிப்பு நட­வ­டிக்­கைக்­கு­மான அற­நிதி - ஆகி­யன அந்த மூன்று நட­வ­டிக்­கை­கள்.

"கொவிட்-19 கொள்­ளை­நோய் தொட­ரும் நிலை­யில் உல­கப் பொரு­ளி­யல் மீட்­சியை ஆத­ரிப்­ப­தில் சிங்­கப்­பூர் பேரார்­வம் காட்டி வரு­கிறது.

"அனைத்­து­லக பண நிதி­யத்­தின் வேண்­டு­கோளை ஏற்று உறுப்பு நாடு­கள் பல பங்­க­ளிப்­புக்கு முன்­வந்­துள்­ளன.

"எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நாடு­க­ளுக்கு உதவ எடுக்­கப்­படும் உலக நட­வ­டிக்­கையை ஆத­ரிக்­கும் விதத்­தில் சிங்­கப்­பூ­ரின் பங்­க­ளிப்பு அமை­கிறது," என்று ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

அதன்­படி, ஐஎம்­எ­ஃப்­பின் பேர­ழிவு முறி­ய­டிப்பு மற்­றும் நிவா­ரண அற­நி­திக்கு US$17.6 மில்­லி­யன், கொவிட்-19 நெருக்­கடி சமா­ளிப்­புத் திறன் நட­வ­டிக்­கைக்கு US$2 மில்­லி­யன் என சிங்­கப்­பூ­ரின் பங்­க­ளிப்பு அமை­வ­தா­க­வும் இவை ஆணை­யத்­தின் அதி­கா­ர­பூர்வ வெளி­நாட்­டு­க­ளுக்­கான கையி­ருப்பு நிதி­யி­லி­ருந்து பெறப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கடும் கடன் பிரச்­சி­னை­யில் சிக்­கித் தவிக்­கும் ஏழை நாடு­க­ளின் வளர்ச்­சிக்­கும் ஏழ்மை தணிப்பு நட­வ­டிக்­கைக்­கு­மான அற­நிதிக்கு சிங்கப்பூர் US$970,000 கொடுத்து உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோமாலியாவுக்கான ஐஎம்­எ­ஃப்­பின் US$344 மில்லியன் நிதி நிவாரணத் தொகுப்பு நடவடிக்கைக்கு இந்நிதி கைகொடுக்கும்.

இதற்கான நிதி, ஆணை­யத்­தின் அதி­கா­ர­பூர்வ வெளி­நாட்­டு­களுக்­கான கையி­ருப்பு நிதி­யில் இருந்து பெறப்படாது. அதற்குப் பதில், இதர ஐஎம்­எ­ஃப்­பின் கணக்கு களின் தற்போதைய வளங்களிலி ருந்து பெறப்படும் என்று தெரிகிறது.

சோமாலியாவின் நெடுநாள் கடனைத் தீர்க்க ஐஎம்எஃப் அவசர உதவி நாடியதாக ஆணையம் கூறி உள்ளது.

கொவிட்-19 நெருக்கடியால் வசதிகுறைந்த நாடுகள் பரிதவிப்பு