நீக்குப்போக்கான வேலைமுறை: இந்திராணி வலியுறுத்து

நீக்குப்போக்கான வேலைமுறை: இந்திராணி வலியுறுத்து

2 mins read
12268cf0-e2fd-469f-b7cf-bfb0410a3d34
-

அதி­க­மான ஊழி­யர்­கள் தங்­க­ளது அலு­வ­ல­கத்­திற்­கும் வேலை­யி­டத்­திற்­கும் திரும்­பும் வேளை­யில் அவர்­க­ளுக்கு அதிக நீக்­குப்­போக்கான வேலை ஏற்­பா­டு­களை அனு­ம­திக்க வேண்­டும் என்று நிறு­வ­னங்­களை பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா கேட்­டுக்­கொண்­டுள்­ளார். ஊழியர்­கள் தங்­க­ளது வய­தான பெற்­றோர்­

க­ளை­யும் குழந்­தை­க­ளை­யும் கவ­னிக்க போது­மான நேரத்ை­தயும் வாய்ப்­பை­யும் அவர்­க­ளுக்கு வழங்­கு­வது பற்றி முத­லா­ளி­கள் தீவி­ர­மா­கச் சிந்­திக்க வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்து உள்­ளார்.

தேசிய மக்­கள்­தொகை மற்­றும் திற­னா­ளர் பிரி­வைக் கவ­னிக்­கும் குமாரி இந்­தி­ராணி, கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு வரும் வேளை­யில் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது ஊழி­யர்­கள் இரு­வேறு சூழல்­களில் பணி­பு­ரி­யும் வாய்ப்பை வழங்­கு­வது பற்றி பரி­சீ­லிக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார். வீட்­டில் சில நாட்­களும் அலு­வ­ல­கத்­தில் சில நாட்­களும் அவர்­கள் வேலை செய்­யும் விதத்­தில் ஏற்­பா­டு­கள் தரப்­பட வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.

எஸ்­ஐ­ஐஏ எனப்­படும் அனைத்­து­லக விவ­கா­ரங்­க­ளுக்­கான சிங்­கப்­பூர் நிறு­வ­னம் என்­னும் அமைப்பு நடத்­திய கருத்­த­ரங்கு ஒன்­றில் பங்­கேற்­றுப் பேசிய குமாரி இந்­தி­ராணி, "சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த பிறப்பு விகி­தம் ஆகக் குறைவாகச் சரிந்துவிட்ட நிலை­யில் அதி­க­மான குழந்­தை­கள் இங்கு தேவைப்­ப­டு­கி­றார்­கள்.

"அதே நேரம் குடும்­பங்­க­ளைப் பற்­றிப் பேசும்­போது வேலை­யிட மன­உ­ளைச்­சல், குழந்­தைப் பரா­ம­ரிப்­புக்­கும் பெற்­றோர் கவ­னிப்­புக்­கும் போது­மான நேர­மின்மை ஆகி­ய­வற்றை நிறை­யப் பேர் சந்­திக்­கி­றார்­கள். அதி­க­மான ஊழி­யர்­கள் வேலைக்­குத் திரும்­பு­வ­தால் முத­லா­ளி­க­ளுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்­படும். இதனை நாம் முன்­னோக்­கிச் சிந்­திக்­கை­யில், இரு வகை வேலை­முறை அவ­சி­யப்­ப­டு­கிறது.

"குழந்­தை­க­ளை­யும் வய­தான பெற்­றோ­ரை­யும் பராமரிக்க நேரம் கொடுத்து நீக்­குப்­போக்­காக நடந்­து­கொள்­ளும் முத­லா­ளி­களை ஊழி­யர்­கள் மெச்­சு­வார்­கள்," என்­றும் அவர் தெரி­வித்­தார்.