சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 34 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்
களின் எண்ணிக்கை 60,381ஆக அதிகரித்தது.
புதிதாக அறிவிக்கப்பட்ட 34 பேரில் 33 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்.
வெளிநாட்டு ஊழியர் தங்கு
விடுதியில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று சுகாதார அமைச்சு அதன் முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
செவ்வாய்க்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட 26 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். சிங்கப்பூரர்கள் எழுவரும் நிரந்தரவாசிகள் மூவரும் இவர்களில் அடங்குவர். இந்தியா, பங்ளாதேஷ், கத்தார், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து இவர்கள் சிங்கப்பூர் திரும்பினர்.
இவர்கள் தவிர, இந்தியாவிலிருந்தும் பங்ளாதேஷில் இருந்தும் வந்த மாணவர் வருகை அட்டைதாரர்கள் மூவரும் இந்தியா, பங்ளாதேஷ், இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வந்த வேலை அனுமதி (வொர்க் பெர்மிட்) அட்டைதாரர்கள் எழுவரும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.
வேலை அனுமதி அட்டைதாரர்களில் ஐவர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.
குறுகிய கால வருகை அட்டைதாரர்கள் நால்வரும் 26 பேரில் அடங்குவர். இவர்களில் இருவர் சிங்கப்பூரில் உள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களைக் காண இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.

