வங்கி வாடிக்கையாளர் மனநிறைவு குறைந்ததாக ஆய்வில் தகவல்

வங்கி வாடிக்கையாளர் மனநிறைவு குறைந்ததாக ஆய்வில் தகவல்

1 mins read
8090b03c-8753-49a6-a913-21b2d766e3e3
-

கொவிட்-19 சூழ­லில் பல­ரும் இணை­யம் மூலம் வங்­கிச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னா­லும் வங்கி வாடிக்­கை­யா­ளர் மன­நி­றைவு குறைந்து உள்­ள­தாக சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வரு­டாந்­திர ஆய்வு தெரி­விக்­கிறது.

'சிங்­கப்­பூர் வாடிக்­கை­யா­ளர் மன­நி­றை­வுக் குறி­யீடு' என்­னும் அந்த ஆய்வு, துறை, துணைத் துறை, நிறு­வன மட்­டத்­தில் வாடிக்­கை­யா­ளர் தெரி­வித்த புள்­ளி­க­ளைக் கொண்டு ஏற்ற இறக்­கத்ைதக் கணக்­கிட்­டது.

அதன்­படி, நிதித்­துை­றக்கு உட்­பட்ட வங்கி என்­னும் துணைத் துறைக்­கும் 100க்கு 74 புள்­ளி­கள் கிடைத்­தன. இது இதற்கு முந்­திய ஆண்­டைக்காட்­டி­லும் 1.7% குறைவு. கடன்­பற்று அட்டை என்­னும் துணைத் துறைக்­கான மதிப்­பீட்டு புள்ளி, முந்­திய ஆண்­டைப்போலவே 7.27 என்று நீடித்­தது. புதி­தா­கச் சேர்க்­கப்­பட்ட இணை­யம் வழி பணம் கட்­டு­தல் என்­னும் துணைத் துறைக்கு 79 புள்­ளி­கள் கிடைத்­துள்­ள­தாக நேற்று வெளி­யி­டப்­பட்ட ஆய்வு முடி­வு­கள் குறிப்­பிட்­டன.