நோன்பு நோற்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு வழிகாட்டி

நோன்பு நோற்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு வழிகாட்டி

1 mins read
672d15eb-7499-4c2d-a2e3-89f72e958986
-

ரம­லான் மாதத்­தில் நோன்பு நோற்­கும் நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்­கென புதிய வழி­காட்டி ஒன்றை லாப நோக்­க­மற்ற அமைப்­பான 'டய­பிட்­டிஸ் சிங்­கப்­பூர்' வெளி­யிட்­டுள்­ளது.

நோன்பு இருக்­கும்­போது இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­ன­ருக்­குச் சிக்­கல்­கள் ஏற்­ப­ட­லாம். அவர்­க­ளின் ரத்­தத்­தின் சர்க்­கரை அளவு அதி­கரிக்­கும் சாத்­தி­ய­மும் உண்டு; சரி­யும் அபா­ய­மும் உண்டு. எனவே, இவ்­வ­ழி­காட்டி அவர்­க­ளுக்­குத் தேவை­யான தக­வல்­களை அறி­வுறுத்­தும்.

ஆங்­கி­லம், மலாய் மொழி­களில் அமைந்­துள்ள இந்த வழி­காட்டி, அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளி­லும் விநி­யோ­கிக்­கப்­படும் என்று கூறப்­பட்­டது. நீரி­ழிவு நோயா­ளி­களில் சுமார் 14.4 விழுக்­காட்­டி­னர் மலாய் இனத்­த­வர். அதற்கு அடுத்த நிலை­யில் 14.2 விழுக்­காட்­டி­னர் இந்­தி­யர்­கள். சீனர்­கள் 8.2 விழுக்­காட்­டி­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நீரி­ழிவு நோய், அது தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் புதிய திட்­டம் (செடாப்) கீழ் புதிய வழி­காட்டி வெளி­யி­டப்­பட்­டது.

இந்த 'செடாப்' இயக்­கத்­தின்­கீழ், அனைத்து இனத்­த­வ­ருக்­கும் பொருந்­தும் வகுப்­பு­களும் உரை­யா­டல்­களும் ஏற்­பாடு செய்­யப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவற்­றில் சமை­யல் வகுப்­பு­கள், சுகா­தாரப் பேச்­சு­கள் அடங்­கும்.

இதற்கிடையே நீரி­ழிவு இருப்­ப­தன் அறி­கு­றி­களை ஆரம்­பக் கட்­டத்­தி­லேயே கண்­ட­றியும் திட்­டம் தொடர்­பில் 'டய­பிட்­டிஸ் சிங்­கப்­பூர்' அமைப்­பும் அஸ்ட்­ரா­ஸெ­னிகா நிறு­வ­ன­மும் மூன்­றாண்டு ஒப்­பந்­தம் ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

"நோயா­ளி­களை ஆரம்­பக் கட்­டத்­தி­லேயே கண்­ட­றிந்து, ஆலோ­சனை வழங்கி, உண­வுப் பழக்­கத்­தில் மாற்­றம் செய்ய உதவி, நோய் கடு­மை­யா­கா­மல் தவிர்க்­க­லாம் என்­றார் அஸ்ட்­ரா­ஸெ­னிகா நிறு­வனத்­தின் திரு வினோத் நாரா­யணன்.