தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்ப குதூகலத்திற்கு ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, பூமலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டு இடங்கள்

2 mins read
38f1ab5a-559e-415a-965a-6c4416484f5f
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 'கோஸ்டல் பிளேகுரோவ்' என்ற இடத்தில் சிறார்கள் விளையாடி மகிழ்கிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, சிங்­கப்­பூர் பூமலை ஆகிய மிக­வும் விரும்­பப்­படும் பூங்­காக்­களில் அண்­மை­யில் திறக்­கப்­பட்டு இருக்­கும் புற­வெளி விளை­யாட்டு இடங்­கள் மக்­க­ளி­டம் பிர­ப­ல­ம­டைந்து வரு­கின்­றன. ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் 'கோஸ்­டல் பிளே­கு­ரோவ்' என்ற கேளிக்கை இட­மும் பூம­லை­யில் 'கோமோ அட்­வன்­சர் குரோவ்' என்ற இட­மும் அண்­மை­யில் திறக்­கப்­பட்­டன.

அவற்­றின் வச­தி­களை இல­வ­ச­மாக மக்­கள் அனு­ப­விக்­கலாம். குளு­குளு வசதி இல்லை என்­றா­லும் திறந்­த­வெ­ளி­யில் பல­வற்­றை­யும் அனு­ப­வித்து மகிழ வாய்ப்­பு­கள் இருக்­கின்­றன என்­பதை அவை மெய்ப்­பிக்­கின்­றன. கோஸ்­டல் பிளே­கு­ரோவ் கேளிக்கை இடம் 4.5 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் குடும்­பங்­க­ளைக் கருத்­தில்­கொண்டு உரு­வாக்­கப்­பட்டு இருக்­கிறது.

சாப்­பாட்டு இடங்­கள் அங்கு ஏரா­ளம். சிங்­கப்­பூ­ரி­லேயே ஆக உய­ர­மான சறுக்கு உருளை அங்கு­தான் இருக்­கிறது. இப்­போது அந்த உரு­ளைக்கு விளை­யாட்டு கோபு­ரம் என்று பெயர் சூட்­டப்­பட்டுள்ளது.

சிறார்­க­ளைப் பொறுத்தவரை­ நான்கு மாடி உய­ரத்­திற்கு அமைக்­கப்­பட்டு இருக்­கும் வலை விளை யாட்டு அரங்­கம் மிக­வும் பிர­ப­ல­மா­ன­தாக இருக்­கிறது.

இயற்கை விளை­யாட்­டுத் தோட்­ட­மும் உண்டு. அங்கு சிறார்­கள் மூங்­கில் சுரங்­கம் வழி­யா­கச் சென்று பெரும் பெரும் மணற்­குழி­களில் இறங்கி விளை­யா­ட­லாம்.

பாலர்­பள்ளி பிள்­ளை­க­ளுக்­காக கடற்­க­ரை­யோர புற­வெளி பாட வகுப்­ப­றை­யும் இருக்­கிறது.

பூம­லை­யில் அண்­மை­யில் திறக்­கப்­பட்ட கோமோ அட்­வன்­சர் குரோவ் விளை­யாட்டு இடத்தை 'இயற்கை விளை­யாட்­டுத் தோட்­டம்' என்று தேசிய பூங்­காக் கழ­கம் வர்­ணிக்­கிறது.

ஒரு காட்­டின் நடுவே விளை­யா­டு­வது போன்ற உணர்வை அங்கு நீங்­கள் பெற முடி­யும். சிறார்­கள் சிரிக்­கும் சத்­த­மும் புதர்­களில் கோழி­கள் கொக்­க­ரிக்­கும் ஓசை­யை­யும்­தான் கேட்க முடி­யும்.

சிங்­கப்­பூ­ரில் 1898ல் கட்­டப்­பட்ட ஆகப் பழைய கறுப்பு-வெள்ளை பங்­களா வீட்­டில் (காலோப் ஹவுஸ் எண் 5) உள்ள ஓசி­பிசி மரத்­தோட்­டத்­தில் அமைக்­கப்­பட்டு இருக்­கும் காட்டுக் கண்­டு­பி­டிப்பு மையத்­தில் சிங்­கப்­பூ­ரின் காட்டு விலங்­கின வாழ்வை எடுத்­துக்­காட்­டும் காணொ­ளி­க­ளை­யும் கலந்­துறவாடக் கூடிய காட்­சி­க­ளை­யும் காண முடி­யும்.

அவற்றிலிருந்து தாவரவியல் பற்றியும் வரலாற்றையும் சிறார்கள் தெரிந்துகொள்ளலாம்.