தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பகடிவதை சம்பவத்தில் கார்ப்பரல் கோக் மரணம்: வழக்கில் புதிய திருப்பம் முந்தைய கடும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

2 mins read
bfb1ebbd-7614-4092-b14a-e00d60b1b51b
துவாஸ் வியூ தீய­ணைப்பு நிலையத்­தின் வேலை­மு­றைப்­ பட்டி­யல் அதிகாரி கென்­னத் சோங் சீ பூன் (இடது), அவ­ரது உத­வி­யா­ளர் நஸான் முக­மது நாஸி (வலது). படங்கள்: திமத்தி டேவிட்பகடிவதை சம்பவத்தில் உயிரிழந்த கார்ப்­ப­ரல் கோக் யு­வன் சின். படம்: லியன்ஹ வான் பாவ் -
multi-img1 of 3

கார்­ப்பரல் கோக் யுவன் சின், 22, கடந்த 2018ஆம் ஆண்டு பக­டி­வதை சம்­ப­வத்­தால் உயி­ரி­ழந்­த­தன் தொடர்­பில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த இரண்டு அதி­கா­ரி­கள், உயர் நீதி­மன்­ற ஆணைப்படி, அவர்­கள் மீது முன்பு சுமத்­தப்­பட்ட கடும் குற்­றச்­சாட்­டு­க­ளையே எதிர்­நோக்க உள்­ள­னர்.

கார்­ப்ப­ரல் கோக் யு­வன் சின்­னுக்கு மற்ற சேவை­யா­ளர்­கள் பகடி­ வதை மூலம் உயி­ருக்கு ஆபத்தை விளை­விக்­கும் விதத்­தி­ல் மேற் கொண்ட கடு­மை­யான நட­

வ­டிக்­கைகளில் துவாஸ் வியூ தீய­ணைப்பு நிலை­யத்­தின் முன்­னாள் வேலை­மு­றைப்­ பட்­டி­யல் அதிகாரி கென்­னத் சோங் சீ பூன், 40, அவ­ரது உத­வி­யா­ளர் நஸான் முக­மது நாஸி, 42, ஆகிய இரு­வ­ரும் வேண்டு­மென்றே உத­வி­ய­தாக நேற்று நீதி­பதி சீ கீ ஊன் குறிப்­பிட்­டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதத்­தில் அந்­தத் தீய­ணைப்பு நிலை­யத்­தில் நிகழ்ந்த பக­டி­வதை சம்­ப­வத்­தின்­போது நீரேற்று கிணற்­றில் மூழ்கி கார்ப்­ப­ரல் கோக் உயி­ரி­ழந்­தார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் கவ­னக்­ கு­றை­வாக நடந்­து­கொண்­ட­தாக குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­

ய­டுத்து அவ்­விரு அதி­கா­ரி­க­ளுக்­கும் கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் 10 வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அதி­கா­ரி­கள் இரு­வ­ரும் 'மிக­வும் கவ­னக் குறை­வாக' இருந்­த­தாக மூத்த மாவட்ட நீதி­பதி ஓங் ஹியன் சன் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

ஆனால், அதி­கா­ரி­கள் இரு­வ­ரின் மீதும் அதிக கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை நிரூ­பிக்க அர­சுத் தரப்பு தவ­றி­விட்­டது என நீதிபதி தவறான முடிவுக்கு வந்தார் என்று நேற்று நீதி­பதி சீ குறிப்­பிட்­டார். அந்த அதி­கா­ரி­க­ளின் மீது முன்பு சுமத்­தப்­பட்ட கடும் குற்­றச்­சாட்­டு­கள் சந்­தே­கத்­துக்கு

இட­மில்­லாத வகை­யில் நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­யும் நீதிபதி சுட்­டிக் காட்­டி­னார்.

அர­சுத் தரப்பு மேல்­மு­றை­

யீ­ட்டுக்கு அனு­மதி அளித்த நீதி­பதி, குற்­றம் சாட்­டப்­பட்ட இரு­வர் மீதும் குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகவும் கூறினார்.

மேலும், தீர்ப்பு மற்­றும் தண்­டனை குறைப்பு முறையீடு போன்­றவை பிறகு விசா­ரிக்­கப்­படும் என்­றும் நீதி­பதி குறிப்­பிட்­டார்.

கடு­மை­யான காயம் விளை­வித்த செய­லுக்­குத் துணை­போ­ன­தற்­காக அந்த அதி­கா­ரி­க­ளுக்கு நான்­காண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை, $10,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.